india

img

திருப்பதி லட்டு விவகாரத்தில் வழக்குப்பதிவு!

திருப்பதி,செப்.26- திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில், 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.