இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) புதிய ஆளுநராக, ஒன்றிய வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்கிறார்.
தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நாளையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.