கர்நாடக டிஜிபி ஆக இருந்த பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குநர் சுபோத்குமாரின் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் வரும் மே 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அடுத்த இயக்குநராக கர்நாடக டிஜிபி ஆக இருந்த பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதின்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பிரவீன் சூட் 2 ஆண்டுகள் சிபிஐ இயக்குநராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.