india

img

முஸ்லீம்களுக்கு எதிராக ஆத்திரம் மூட்டும் நடவடிக்கை;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தலைநகர் புதுதில்லியில் இந்தர்லோக் பகுதியில் நமாஸ் தொழுகை மேற்கொண்டிருந்த முஸ்லீம் மக்களை தில்லிக் காவல்துறையினர் உதைத்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சட்டவிரோத, அறநெறியற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது எவ்விதத் தாமதமும் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இயங்கிடும் தில்லிக் காவல்துறை மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் மதவெறியைக் கிளப்பிவிடும் விதத்தில் இது நடைபெற்றிருக்கிறது.

இத்தகைய ஆவேசமூட்டும் நடவடிக்கைகள் வெற்றிபெற அனுமதித்திடக் கூடாது என்று தில்லி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.