india

img

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என்றும், ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு அவர் பதவியில் தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தற்போது, எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15க்கு பிறகு, எஸ்.கே.மிஸ்ராவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.