india

img

ஏர் இந்தியாவிற்கு ரூ.10 லட்சம் அபராதம்

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  
பயணிகள் செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் விமானத்தில் ஏற்ற மறுத்ததற்காகவும், இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கட்டாய இழப்பீடு வழங்காததற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இதுகுறித்து டிஜிசிஏ மூலம் தொடர்ச்சியான சோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் டெல்லியில் கண்காணிப்பின்போது, ஏர் இந்தியா விஷயத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிந்தது. இதனால் விமான நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயம் மிகவும் கவலைக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அமலாக்க நடவடிக்கையின்படி ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.