india

img

திருமண புகைப்படங்கள் எடுத்த போது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் 

வெட்டிங் போட்டோ சூட் எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கடியங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜில். இவருக்கு கடந்த மார்ச்  14 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தம்பதியினர் இருவரும் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க திட்டமிட்டு,  திங்களன்று ஜானகிகாடு அருகே உள்ள குட்டியாடி ஆற்றில் போட்டோ ஷூட் எடுத்துக சென்றுள்ளனர். அப்போது ஆற்றிலிருந்த பாறை மீது தம்பதியனர் ஏறி புகைப்படத்திற்காக நின்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். இதில் ரெஜிலுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.