india

img

தில்லியில் ஏசி வெடித்ததில் ஒருவர் பலி

தலைநகர் தில்யில் ஏசி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தென்கிழக்கு டெல்லியில் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் பழுதான ஏ.சி. மெஷினை சரி செய்வதற்காக நதீம் மற்றம் ஷான்  இருவரும் சென்றனர்.  அவர்கள் ஏ.சி.யின் பழுதை சரி பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் நதீம், ஷான் உள்ட 6 பேர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த நதீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.