இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட், இன்று காலை 9.18 மணிக்கு 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ வடிவமைத்த இஓஎஸ் 7, 75 பள்ளிகளை சேர்ந்த சுமார் 750 பள்ளி மாணவர்கள் வடிவமைத்த ஆசாதி சாட் 2 செயற்கை கோள், அமெரிக்க தனியார் நிறுவனத்தின் ஜேனஸ் 1 செயற்கை கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்த உள்ளது. இந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் 15 நிமிட பயணத்தில் 450 கிமீ புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.