india

உ.பி.,யில் 14 வயது தலித் சிறுமி கும்பல் பலாத்காரம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலி யல் குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில், மீரட் மாவட்டத்தில் 14  வயது தலித் சிறுமி கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள் ளது. புலந்த்ஷாஹர் பகுதியில் 14 வயது தலித் சிறுமியை மிரட்டி மற்றும் பணம் கொடுத்து இரண்டு வாரம் தொடர்ந்து சித்ரவதையுடன் 2 இளைஞர்கள் கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பையில் பணம் இருந்ததை கண்டு அவரது தாய் விசாரித்த பொழுது, தன்னை சித்ர வதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். 

இதையடுத்து சிறுமியின் தாய் போலீசில் புகார் அளிக்க 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.