மணிப்பூரில் வன்முறை குறைகிறதாம்!
பிரதமர் மோடி கூறுகிறார்
மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவ தாக நாடாளுமன்ற மாநிலங்கள வையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களவையில் செவ்வாயன்று பிர தமர் மோடி பேசும்போது, மணிப்பூரை பாதுகாத்திடுக என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அப்போது ஒரு வார்த்தை கூட மணிப்பூர் குறித்து மோடி பேசவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்ட செய்தி நாடு முழுவதும் பர வியதால் புதனன்று மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து பேச வேண்டிய கட்டா யத்திற்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டார்.
மாநிலங்களவையில் புதனன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுகை யில், மாநில அரசு மற்றும் மற்றவர்களு டன் சேர்ந்து ஒன்றிய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வரு கிறது. மாநிலத்தின் அதிகமான இடங்க ளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள் ளன. முற்றிலும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.
வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள னர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர் வெள்ள அபாயத்தை எதிர் கொண்டிருக்கும்போது, ஒன்றிய அரசு இரண்டு தேசிய பேரிடர் குழுவின் இரண்டு அணிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைத் தது என்று தெரிவித்தார்.
புதுதில்லி
ஹாத்ரஸில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
போலிச் சாமியார் போலே பாபா தலைமறைவு
உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் சம்ப வத்தில் 134 பேர் பலியாக கார ணமான போலிச் சாமியார் போலே பாபா தலைமறைவானார்.
நாட்டையே உலுக்கிய துயரச் சம்ப வமான இதில் உத்தரப்பிரதேச காவல் துறை தரப்பில் வெறும் 48 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப் பட்டிருந்தனர்.சாமியார் போலே பாபா வின் சீடர்களே கூட்டத்தை நடத்துவதை நிர்வகித்தனர்.
கூட்டம் முடிந்தவுடன், முதல் ஆளாக போலே பாபா கிளம்பியுள்ளார். அவரது பாதங்களில் ஆசிர்வாதம் பெற மக்கள் முண்டியடித்துள்ளனர். கூச்சல், குழப் பத்துடன் கூட்டத்தினர் வெளியேறிய போதும் வாசல்களில் நெரிசல் ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த னர். சில நிமிடங்களில் பலர் உயிரிழந்தனர்.
தனக்காக வந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் சாமியார் போலே பாபா சொகுசு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பி யுள்ளார். சம்பவத்தை போன் மூலம் அறிந் தும் அவர் திரும்பி வரவும் இல்லை. பலி யானவர்களை பார்க்க போலே பாபா, மருத்துவமனைகளுக்கும் செல்ல வில்லை. மாறாக, தலைமறைவானவர் தன் செல்போனையும் அணைத்து வைத் துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி மீது வழக்குப் பதிவு செய்த உத்தரப்பிரதேச காவல்துறை, நிர்வாகத்தி னரை தேடி வருகின்றனர். போலே பாபா வையும் பிடிக்க முடியவில்லை.
இதுவரை பலியானவர்கள் எண் ணிக்கை 134 என உயர்ந்திருப்பதாக மாநில தலைமை செயலாளர் மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இவர்களில் 126 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆன்லைன் சேவை
கே ஸ்மார்ட் மூலம் 3,52,256சான்றிதழ்கள்
உள்ளாட்சி அமைப்புகளின் சேவை களுக்காக அலுவலகங்களுக்கு அலையாமல் ஆறு மாதங்களில் ஏழைகளின் கைகளுக்கு 3,52,256 சான்றி தழ்கள் சென்றடைந்துள்ளன. 1,96,269 சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1,55,987 சான்றிதழ்கள் திருத்தப்பட்டன.
2024 ஜனவரி முதல் கே ஸ்மார்ட் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வெவ் வேறு சேவைகளுக்கு வெவ்வேறு மென் பொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி ஒரே அமைப்பாக மாற்றுவதே கே-ஸ்மார்ட்டின் இலக்காக இருந்தது. விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை ஆன்லைனில் சமர்ப்பித்து அவற்றின் நிலையை அறிய முடியும். முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சியில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த சேவை நவம்பர் மாதம் ஊராட்சிகளுக் கும் விரிவுபடுத்தப்படும்.
1.3 லட்சம் நிறுவனங்களுக்கு உரிமம்
ஆன்லைனில் மொத்தம் 1,31,907 நிறு வனங்கள் கே-ஸ்மார்ட் மூலம் உரிமம் பெற்றுள்ளன. இதில் 1,19,828 வணிக நிறு வனங்கள் உரிமங்களை புதுப்பித்துள் ளன. 12,079 நிறுவனங்கள் புதிய உரி மங்கள் பெற்றுள்ளன. 13,095 கட்டிடங்க ளுக்கான அனுமதியும் வழங்கப்பட்டது. பிறப்பு - 11,995, இறப்பு - 55,195, திருமணம் - 24,498 என புதிய சான்றிதழ்கள் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட பிறப்பு - 1,53,241, இறப்பு - 1,986, திருமணம் - 760 சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
புதுதில்லி
‘பாபாக்களின் சந்தையை வளரவிட்டால் உயிரிழப்புகளை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
பாபாக்களின் சந்தையை வளர விட்டால் மக்களின் உயிரி ழப்புகளை எப்படி கட்டுப் படுத்த முடியும் என்று ஒன்றிய பாஜக அரசுக்கு ஆம் ஆத்மி எம்.பி.,சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் வழிபாட்டு கூட்டத்தை நடத்தினார்.இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 134 பேர் பலியாகினர். இச்சம்ப வம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற் படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறுகையில், “இந்த நாட்டில் மக்க ளின் உயிருக்கு அறவே மதிப்பில்லை. ஒருவர் தனது பாபா பஜாரை கட்டமைக்கி றார். அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
இந்த போக்கு ஹாத்ரஸில் மட்டு மல்ல. நாடு முழுவதும் இதே நிலைதான். ஹரியானாவை எடுத்துக் கொண்டால் அங்கு கொலை மற்றும் பாலியல் வன் கொடுமை குற்றவாளியாக உள்ள பாபா (சாமியார்), தனக்கு வேண்டிய நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவரை பார்த்து ஒட்டுமொத்த அரசும் வணங்குகிறது. இப்படியாக பாபாக்க ளின் சந்தையை நாட்டில் வளர விட்டால் இதுபோன்ற சம்பவங்களை உங்களால் எப்படி கட்டுப்படுத்த முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலி ருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி
கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தில்லி மதுபானக் கொள்கை முறை கேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காணொலி மூலம் தில்லி முதலமைச் சர் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி-ரோஸ் அவென்யூ நீதி மன்றம் உத்தரவிட்டது.
புதுதில்லி
ஜிகா வைரஸ் பரவல்
தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவி வரு கிறது. புனேவில் 7 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பர வலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் இந்தியாவில் அதிகளவு பரவ வாய்ப்பிருக்கி றது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்த கொசுக்கள் பக லில் கடிக்கக்கூடியவை. ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் உடலுறவு மூலமும் பர வக்கூடியது.ரத்த பரிமாற்றங்களின் வழியாகவும் பாதிக்கப்பட்ட நபரி டம் இருந்து மற்றவருக்கு பரவும். ஒருவேளை இந்தத் தொற்று கர்ப் பிணி பெண்களுக்கு இருந்தால், வயிற்றில் வளரும் குழந்தைகளுக் கும் பரவும் என்று கூறப்படுகிறது.
ஜிகா வைரஸ் பரவுவதற்கு கார ணமான கொசுக்களை ஒழிக்க ஊழி யர்கள் அனைத்து பகுதிகளிலும் துரித பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொசுக்கள் பெருக்கத்தை கட் டுப்படுத்த வேண்டும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாள்களுக்கு நீடித்தால் மருத்துவரை அணுகவும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகள், பணி யிடங்கள், பள்ளிகள், கட்டுமானத் தளங்கள், நிறுவனங்கள் மற்றும் சுகாதார வசதிகளில் வெக்டார் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் முக்கி யத்துவம் குறித்து மாநிலங்க ளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி யுள்ளது.