ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை யுஜிசி நெட் தேர்வு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறி வித்துள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரை யும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை யும் தேர்வு நடைபெறும். வினாத்தாள் கசிவு புகாரை அடுத்து தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்திருந்தது.
ராஜேந்திர நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை வாங்குவது ஒப்பந்தங்களுக்கு எதிரானது எனக் கருதி விசாரிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரி வான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது. தமிழ்நாட்டில் எடுத்துவரும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு 100 வீடுகள் கட்டித்தரப்படும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
வயநாடு
ஆறுதல் அளிக்கும் செய்தி
ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிருடன் மீட்பு
நிலச்சரிவு பகுதியான படவெட்டிக் குன்னில் வசிக்கும் ஜானி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உயிரு டன் மீட்டனர். இதே போல வேறு பகு திகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிய தேடுதல் வேட்டை தீவி ரப்படுத்தப்பட்டது. காணாமல் போன வர்கள் பணி நிறைவடைந்ததாக ராணு வம் கூறிய நிலையில், ஒரே குடும் பத்தினர் 4 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ள சம்பவம், காணாமல் போன உற வினர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறு தலை ஏற்படுத்தியுள்ளது. ஜானி குடும்பத் தினர் போல தங்கள் குடும்ப உறுப்பி னர்களும் உயிரோடு வருவார்கள் என அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
திருச்சூர்
ஆசிரியர் அடித்தால் குற்றமில்லையாம்!
கேரள நீதிமன்றம் தீர்ப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், கடந்த ஜனவரி மாதம் 10 அன்று வகுப்பு நேரத்தில் மாணவர்கள் உணவு உட்கொண்டும், பாட்டுபாடியும் இருந்துள் ளனர். இந்த செயலை கண்டித்த பள்ளியின் முதல்வர் 5 மாணவர்க ளை கன்னத்தில் அறை ந்து,”இனிமேல் இதுபோன்ற சம்ப வங்களில் ஈடுபடக் கூடாது” என எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவத்தை 5 மாணவர்களும் தங்களது பெற்றோர் களிடம் கூற, பெற்றோர்கள் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மீது பாவராட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை ரத்து செய்யக்கோரி பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பதருத்,”ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படும் மாணவர்களின் மருத்துவ பரிசோதனையில் உட்புற மற்றும் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. பள்ளியில் ஒழுக் கத்தை நிலைநாட்டுவதற்காக மாணவர்க ளை அடித்தாலும், அதை கடுமையான குற்றமாகக் கருத முடியாது. இதனால் பள்ளி முதல்வர்கள் மீது பதிவு செய் யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகி றது” என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளார்.
மும்பை
பூஜா ஹெட்கரையும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவிட்ட மோடி அரசு
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா ஹெட்கர் என்பவர் போலியான மாற்றுத்திறனாளி ஆவணச் சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீடு மூலம் யுபி எஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். இந்த முறை கேடு சம்பவம் தொடர் பாக தில்லி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் மோசடி, மாற்றுத் திற னாளிகளுக்கான ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்துவது என பல்வேறு பிரிவுக ளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி காவல்துறையின் வழக்குப் பதி வால் பூஜாவின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்து, இனிமேல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாதபடி அவருக்கு நிரந்த ரத் தடை விதித்தது யுபிஎஸ்சி.
இந்நிலையில், கைது நடவடிக்கை யில் இருந்து தப்ப பூஜா தில்லி நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். பூஜாவின் மனுவை தில்லி நீதிமன்றம் வியாழனன்று தள்ளு படி செய்து உத்தரவிட்ட நிலையில், தில்லி போலீசார் விசாரணையை தொடங்கும் முன்னரே பூஜா ஹெட்கர் வெளிநாடு தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கியில் வாங்கிய கடனை அடைக் காமல் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் வெளி நாட்டிற்கு தப்பி ஓடியதை போல, பூஜா ஹெட்கரையும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவிட்டது மோடி அரசு.
புதுதில்லி
“எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய தயாராக உள்ளது”
பட்ஜெட் விவாதத்தில் தான் ஆற்றிய உரைக்காக தன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனையிட திட்டமிட்டிருப்ப தாக ராகுல் காந்தி தெரிவித் திருக்கிறார். இதுதொடர் பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறு கையில்,”வெளிப்படை யாக இருவரில், ஒருவருக்கு என் சக்ரவியூக பேச்சு பிடிக்கவில்லை. அமலாக் கத்துறைக்கு உள்ளே இருக்கும் நலம் விரும்பிகள் சிலர், அமலாக்கத்துறை என் வீட்டில் சோதனையிட திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அமலாக்கத்துறை இயக்குந ரகத்தை இரு கரங்கள் நீட்டி வரவேற்கக் காத்திருக்கிறேன். டீயும், பிஸ்கட்டும் என் செலவு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.