இந்தியாவில் புதிதாக 11,692 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 2,475 பேரும், மகாராஷ்டிராவில் 1,113 பேரும், டெல்லியில் 1,603 பேரும், அரியானாவில் 1,059 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 9 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 4 பேரும், தில்லி, அரியானா, மகாராஷ்டிராவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.