india

குஜராத்தில் உணவுப் பூங்காக்களை திறக்கும்: ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள்

புதுதில்லி, டிச.30- இந்தியாவில், உணவுப் பூங்காக் களை அமைக்க, ஐக்கிய அரபு அமீ ரகம் (UAE) 2 பில்லியன் டாலர்களை முத லீடு செய்கிறது.

மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய  நாடுகளில் உணவுப் பாதுகாப்பை அதி கரிக்க, இந்தியா மூலமாக தொடர்  உணவுப் பூங்காக்களை உருவாக்கு வது என (I2 U2)  (India,Israel, UAE,  US) நான்கு நாடுகளால் முடிவு செய்யப்  பட்டுள்ளது.

குறிப்பாக, ஐக்கிய அரபு அமீர கம், உணவுப் பூங்காக்களை (FOOD  PARK) தனது நீண்டகால திட்டமாகக் கொண்டிருக்கிறது. அதனை தற்போது 2 பில்லியன் டாலர் முதலீட்டில் குஜ ராத்தில் துவக்க உள்ளது. 

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (ECA - Essential Commodities Act) விதிகள் இதற்கு தடையாக இருந்த நிலையில், அந்த தடைகளை விலக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

அதாவது, தற்போதுள்ள இந்திய  அத்தியாவசிய பொருட்கள் சட்டத் தின்படி, உணவுப் பூங்காக்களில் வெங்  காயம், அரிசி மற்றும் வாழைப்பழங் களை குறிப்பிட்ட அளவு மட்டுமே இருப்பு வைக்க முடியும். அதனை முத லீட்டாளர்கள் எந்த பொருளையும் இருப்பு வைக்கவும், ஏற்றுமதி செய்ய வும் தடையில்லை என்று இந்தியா கத வைத் தாராளமாக திறந்து விட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலி ருந்து மூன்று பொருட்களுக்கும் உணவு பூங்காக்களுக்கு விலக்கு கொடுப்ப தென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் தனது முதல் உணவு பூங்காவை கண்ட்லா (Kandla) அருகில் உரு வாக்க ஐக்கிய அரபு அமீரக முத லீட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலீட்டாளர்கள் அருகில் உள்ள பண்ணை உரிமையாளர்களிடம் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளனர். 

“ஐக்கிய அரபு அமீரகம் மாநில அர சுடன் இன்னும் பல்வேறு அனுமதி களை பெறுவதற்காக பேசி வருகிறது.  படிப்படியாக வேலைகள் துவங்கப்பட உள்ளது” என்று முதலீட்டாளர்கள் தெரி விக்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் 2018-ஆம்  ஆண்டே இந்தியாவில் உணவு பூங்  காக்களை துவக்குவதற்கான ஏற்பாடு களைச் செய்தது. ஆனால் அது நடை முறைக்கு வரவில்லை. இதையடுதது, 2022 ஜூலையில், I2U2 நாடுகளின் உச்சி மாநாட்டில் இதுபற்றி பேசியது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதி பதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் யாயைர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக  ஜனாதிபதி முகமது பின் சயீத் அல்  நஹ்யான் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

அப்போது, உணவு பூங்காக்கள் துவங்கப்படுவதற்கு, மாநிலத்தின் தன்மை பருவநிலை, நவீன தொழில்  நுட்பங்கள், கழிவுகளை அகற்று வதற்கான ஏற்பாடுகள், தேவையான தண்ணீர் வசதி மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உட்பட தேவைப் படும். நான்கு நாடுகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்வதென கையெ ழுத்திட்டன.

அதைத்தொடர்ந்தே தற்போது நரேந்திர மோடி அரசு கட்டுப்பாடுகளை விலக்கி உணவுப் பூங்காக்களுக்கு கதவுகளை அகலத் திறந்து விட்டுள் ளது. இதன்மூலம் தங்களின் பிரச் சனை தீர்ந்துள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : பிசினஸ் லைன்; 
தமிழில் : ஆர். மைதிலி, திருப்பூர்