ஒடிசாவை கடந்த 20 வருடமாக ஆட்சி செய்து வருகிறது பிஜு ஜனதாதளம். முதல்வ ராக அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ள நிலை யில், தேர்தல் காலங்களில் பாஜக ஆளாத மாநிலங்க ளில் நடைபெறும் அமலாக் கத்துறை சோதனை சம்ப வங்கள் தற்போது ஒடிசாவி லும் தலை தூக்கியுள்ளது.
ஆளும் பிஜு ஜனதாதளத் தின் மூத்த தலைவரும், 6 முறை எம்எல்ஏவான பிர புல்லா சமலின், மகன் பிர யஸ்காந்தி கல்வி விவகா ரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி செய்த தாக, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பத்ரக் மற்றும் புவ னேஸ்வரம் என 10-க்கும் மேற் பட்ட இடங்களில் அமலாக் கத்துறை சோதனை நடத்தி யது.
இதுதொடர்பாக பல் வேறு ஆவணங்கள் கைப்பற் றப்பட்டதாக அமலாக்கத் துறை மூலம் தகவல் வெளி யாகிய நிலையில், பிஜேடி எம்எல்ஏ பிரபுல்லா சமலின் மகன் பிரயஸ் காந்தி மற் றும் பல்வேறு நபர்கள் இணைந்து மிகப்பெரிய அள வில் நிதி மோசடியை அரங் கேற்றியுள்ளதாக அமலாக் கத்துறை அறிக்கை வெளி யிட்டுள்ளது. அறிக்கை குற் றப்பத்திரிக்கைக்கு சமம் என்ப தால் பிரயஸ் காந்தி மற்றும் அவரது கூட்டாளிகள் விரை வில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள் ளது.
ரகசிய கூட்டணி கட்சிக்கும் அதே நிலைமை
பிஜு ஜனதாதளம் “இந் தியா” மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இணையாமல் தனித்து இருக்கும் கட்சி என அக் கட்சி கூறினாலும், மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவை தாக்கல் செய்தலும் பிஜு ஜனதாதளம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும். அதனால் பிஜு ஜனதாதளம் - பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளது என்று அடிக்கடி தகவல் வெளியாகும். இந்த சூழலில் கடந்த வாரம் வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பிஜு ஜனதாதளத்திற்கு 3 இடங்களையும் வெல்ல பலம் இருந்தும், இரு இடத்தை பாஜகவிற்கு தாரை வார்த்தது. இதனால் பிஜு ஜனதாதளம் - பாஜகவுடன் ரகசிய உறவு மீண்டும் ஒரு முறை விமர்சனத்திற்கு உள் ளாகிய நிலையில், ரகசிய கூட்டணி கட்சி என்று கூட பாராமல் ஒடிசாவில் குழப் பத்தை ஏற்படுத்த அம லாக்கத்துறையை களமிறக் கியுள்ளது மோடி அரசு.