புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்றனர்
புதுதில்லி, மார்ச் 15 - பிரதமர் மோடி தலைமை யிலான தேர்வுக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக கேரளத்தைச் சேர்ந்த ஐஏ எஸ் அதிகாரி ஞானேஷ் குமார், பஞ்சாப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை வியா ழனன்று தேர்வு செய்தது. குடியரசுத் தலைவரும், இவர்களின் நியமனத்திற்கு அன்று இரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் வெள்ளி யன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
புதுதில்லி, மார்ச் 15 - 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறி விப்பு சனிக்கிழமையன்று (மார்ச் 16) மாலை வெளி யிடப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணை இயக்குநர் அனுஜ் சந்தக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாலை 3 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்கள வைத் தேர்தல் தேதியுடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களு க்கும் தேர்தல் தேதி அறி விக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
663 நாளுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைப்பு
புதுதில்லி, மார்ச் 15 - சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோதும், கடந்த 663 நாட்களாக பெட் ரோல், டீசல் விலையைக் குறைக்காத ஒன்றிய பாஜக அரசு, தற்போது மக்கள வைத் தேர்தல் அறிவிக்கப் பட உள்ள நிலையில், பெட் ரோல், டீசல் விலையை லிட்ட ருக்கு ரூ. 2 குறைத்துள்ளது. இதனால் சென்னையில், பெட் ரோல் லிட்டர் 100 ரூபாய் 75 காசுகளாகவும், டீசல் லிட்டர் 92 ரூபாய் 34 காசுகளாகவும் குறைந்துள்ளது.
உத்தரகண்ட்டில் பொது சிவில் சட்டம் : ஜனாதிபதி ஒப்புதல்
டேராடூன், மார்ச் 15 - இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறை வேற்றிய முதல் மாநிலம் பாஜக ஆளும் உத்தரகண்ட் ஆகும். உத்தரகண்ட் சட்டப் பேரவையில் பிப்ரவரி 6 அன்று பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநில சட்ட பேரவையில் நிறைவேற்றப் பட்ட பொது சிவில் சட்ட மசோ தாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள் ளார். இதனை மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.