மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (பிப்.10) சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம் மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.