உத்தரப்பிரதேச மாநிலம் அயோத் தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி கடந்த 1992இல் அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது பாஜக -ஆர்எஸ்எஸ் - விஎச்பி - பஜ்ரங் தளம் அடங்கிய இந்துத்துவா கும்பல். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கா னோர் கொல்லப்பட்ட நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பு மூலம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு, பிரத மர் மோடி கடந்த 2024 ஜனவரி 22 அன்று திறந்து வைத்தார். தற்போது இந்த ராமர் கோவில் பாஜகவின் அரசியல் ஆதாய பொருளாக உள்ள நிலையில், மக்களவை தேர்தலில் ராமரை முன்வைத்தும், இஸ்லா மியர்களுக்கு எதிராகவும் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். எனினும் மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவி யோடு ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ லில் பாஜக ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தி லேயே தனது வேலையை காட்ட தொடங்கி யுள்ளது. என்சிஇஆர்டி என்று கூறப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி என்ற பெயரை நீக்கி, மூன்று குவிமான கட்டிடம் என்று குறிப்பிட் டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.