நீதிபதியும் ஒரு பெண்தான். நீதிபதியான பெண்ணு க்கு கருச்சிதைவு ஏற்பட்டதை ஆண் நீதிபதிகள் துளியும் பொருட்படுத்தாமல் மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் இருந்து அவரை பணிநீக்கம் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆண்களுக்கு மாதவிடாய் இருந்தால் தான் பெண்களின் கஷ்டம் தெரியும்.
உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா
இந்தியாவை ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவோம் என மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் கூறுகிறார். இந்திய மக்களை எலிகளாக நினைக்கும் பில்கேட்ஸை அனுமதித்த மோடி இதற்கான விலையை ஒருநாள் கொடுத்தே ஆக வேண்டும்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி
சம்பலில் உ.பி., போலீசார் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள். ஆனால் இறந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்ல ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுப்பது என்ன வகையான சர்வாதிகாரம்?
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
எனக்கு கவுரவ குறைச்சல் ஆகிவிடும். முதல் 6 மாதங்கள் மட்டுமாவது மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக இருக்கிறேன் என நான் அமித் ஷாவிடம் கூறினேன். ஆனால் அமித்ஷா பொருட்படுத்தவில்லை. இது எனக்கு மிக வருத்தமான சம்பவம் ஆகும்.
சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே