காவிரியில் இன்று முதல் 8000 கன அடி நீர் திறப்பு!
பெங்களூரு, ஜூலை 14- “ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தின மும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல் வதை உறுதி செய்ய வேண் டும்” என காவிரி ஒழுங்காற்று குழு, கடந்த ஜூலை 11 அன்று அறிவுறுத்தி இருந் தது. இந்நிலையில், ஜூலை 15 முதல் தமிழகத்துக்கு தின மும் 8 ஆயிரம் கன அடி விகி தம் காவிரியில் தண்ணீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல் வர் சித்தராமையா தெரி வித்துள்ளார். பெங்களூரு வில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவை அவர் வெளியிட் டுள்ளார்.
கேரளத்தில் இன்று 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
திருவனந்தபுரம், ஜுலை 14- கேரளத்தில் கடந்த சில நாட்களாக மழை அதி கரித்துள்ள நிலையில் ஜூலை 15 திங்களன்று மலப் புரம், கண்ணூர், காசர் கோடு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) இந்திய வானிலை ஆய்வு மையத்தால் பிறப் பிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங் களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட் டுள்ளது.