india

img

மோடி அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு சம்மட்டி அடி

பிரதமர் மோடியின் மிக மோச மான பொருளாதாரக் கொள்  கையால் நாட்டில் வேலை யின்மை அதிகரித்துள்ளது. சிறு-குறு- நடுத்தரத் தொழில்கள், விவ சாயம் ஆகியவை கடும் பாதிப் புக்குள்ளாகியுள்ளன. வறுமைக் கோட்டின் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை மிக மோசமான அள வில் அதிகரித்துள்ளது. அதனால் நாட்டில் 24 மணி நேரத்துக்கு அதிக மாக 67 லட்சம் குழந்தைகள் பட்டினி யால் வாடுவதாக மேலும் ஒரு  அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள் ளது.

2019-2021 ஆம் ஆண்டிற்கான  ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெ டுப்பின் தரவைப் பயன்படுத்தி “இ  கிளினிக்கல் மெடிசைன் (eClinical Medicine)” இதழில் “பூஜ்ஜிய உணவு பட்டினிக் குழந்தைகள் (Zero-Food)” என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி யுள்ளது.

அதில், “24 மணி நேரத்துக்கும் மேலாக எதையும் சாப்பிடாத அல்  லது சாப்பிடுவதற்கு வசதியற்ற அல்லது பட்டினி கிடக்கும் பிஞ்சுக் குழந்தைகள் இந்தியாவில் மிக  மிக அதிமாக உள்ளன. முக்கியமாக  ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்  பியா, லைபீரியா, காங்கோ, நைஜீ ரியா மட்டுமின்றி நம் நாட்டிற்கு மிக  அருகில் உள்ள பாகிஸ்தான், வங்க தேசம் நாடுகளுடன் ஒப்பிட்டால், 24 மணிநேரத்துக்கும் மேலாக பட்டினி கிடக்கும் இந்திய குழந்தை களின் எண்ணிக்கை மிக மிக அதி கமாக உள்ளது.

இந்தியாவில் 19.3  சதவீதம், அதாவது சுமார் 67 லட்சம் குழந்தைகள் 24 மணிநேரமும் பட்டினி கிடக்கின்றனர். அண்டை நாடுகளான வங்கதேசத்தில் 5.6 சத வீதமாகவும், பாகிஸ்தானில் 9.2 சத வீதமாக உள்ள நிலையில், வளர்ச்சி  குறைந்த ஆப்பிரிக்க நாடுகளான காங்கோவில் 7.4 சதவீதமாகவும்,  நைஜீரியா 8.8 சதவீதமாகவும், எத்தி யோப்பியாவில் 14.8 சதவீதமாக வும் 24 மணிநேரமும் பட்டினிக் கிடக்  கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவை விட மிகவும் குறை வாக உள்ளன. முக்கியமாக 24 மணி நேரமும் பட்டினி கிடக்கும் குழந்தை களின் எண்ணிக்கை பட்டியலின் முதல் 3 நாடுகளில் இந்தியா உள்  ளது. கினியா (21.8சதவீதம்) முதலி டத்திலும், மாலி (20.5 சதவீதம்) இரண்  டாவது இடத்திலும் உள்ளது.

தாய்ப்பால் ஆறுதல்
இந்த பட்டியலில் இடம்பெற் றுள்ள 92 நாடுகளில் 24 மணி நேர மும் உணவு கிடைக்காத குழந்தை களில் 99 சதவீதத்திற்கும் அதிகமா னோர் தாய்ப்பால் மூலம் பசியை  போக்கியுள்ளனர். உணவு இல் லாத பொழுதிலும் குழந்தைகள் தாய்ப்பால் மூலம் 24 மணி நேரமும் கலோரிகளைப் பெற்றுள்ளனர். இது ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றாலும், “ஆறு மாதங்களில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்க தாய்ப்பால்  போதாது” என அறிக்கையில் கூறப்  பட்டுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகை யில், “67 லட்சம் குழந்தைகள் நாள்  முழுவதும் பட்டினியாக உள்ளனர். இதுதான் இந்திய குழந்தைகளின் இதயத்தை பிழியும் உண்மை  நிலைமை ஆகும். வறுமை ஒழிந்து விட்டது, பொருளாதாரம் வளர்ந்து விட்டது எனும் மோடி அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கு இந்த அறிக்கை சம்மட்டி அடி. உலகி லேயே நம்நாட்டிற்கு கீழே கினியா வும், மாலியும் மட்டுமே உள்ள நிலை யில், பாகிஸ்தானும், வங்கதேச மும் நமக்கு மேலே உள்ளன. இது மிகவும் மோசமான, வெட்கக்கேடான விஷயம் ஆகும்” என அவர் கண்ட னம் தெரிவித்துள்ளார்.