நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்க ளில் ஒன்றான ஒடிசாவில் 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள ஆட்சியை வீழ்த்தி முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது பாஜக. முதல்வ ராக மோகன் சரண் மாஜி கடந்த வாரம் பொறுப்பேற்ற நிலையில், பாஜக ஆட்சி அமைந்த ஒரே வாரத்தில் அம்மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஒடிசாவின் கடலோர நகரமான பாலசோரின் புஜா கியா பிர் பகுதியின் சாலையில் பசு ரத்தம் இருந்ததாகக் கூறி இந்துத்துவா கும்பல் தர்ணா நடத்தியது.
இந்தப் போராட்டத்தின் பொழுது முஸ் லிம் மக்கள் வாழும் இடங்களில் இந்துத் துவா கும்பல் கற்களை வீசியும், முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வாக னங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு முஸ்லிம் மக்கள் பதிலடி கொடுத்த நிலையில், இந்துத் துவா கும்பல் - முஸ்லிம் பிரிவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருபிரி வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், 10க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 4 வீடுகள் தீக்கரை யாகின. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தி வன் முறையை கட்டுப்படுத்தினர். வன்முறைச் சம்பவம் நடைபெற்ற புஜாகியா பிர் பகுதி யில் 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர். பாலாசோர் மண்ட லத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப் பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலாசோர் நகரின் சில பகுதிகளில் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
6 நாட்களில் வன்முறை
அமைதியான சட்டம் ஒழுங்கை கொண்ட ஒடிசாவில், பாஜக ஆளும் மாநிலங்களை போன்று இஸ்லாமியர் களுக்கு எதிரான வன்முறை அரங் கேறிய வரலாறு கிடையாது. ஆனால் பாஜக ஆட்சி அமைந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில் வெறும் 6 நாட்களில் பசுவதை என்ற பெயரில் வன்முறையை கிளப்பிவிட்டுள்ளது இந்துத்துவா கும்பல்.
பாஜக ஆட்சி அமைந்த பின் னரே இதுபோன்ற வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளதாக அரசியல் வல்லு நர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.