india

img

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர்கள்!

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில், கட்சியில் இணைந்தனர். சமீபத்தில் தில்லியில், இருவரையும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று(06.09.24) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் இருவரும் கட்சியில் முறைப்படி இணைந்துள்ளனர்.

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலம், அவர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜிநாமா செய்த கடிதத்தை, சமூக வலைதளத்தில் இணைத்திருந்தார்.