பிரபல ரப்பர் தயாரிப்பு நிறுவனமான பாலிஹோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் சுமார் 200 கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தற்போது சென்னை கிண்டி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.