சென்னை,மே.16- சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னத்திற்கு விண்ணப்பிக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நவம்பர் 11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு 6 மாதம் முன்பாக பொதுச்சின்னம் கோரலாம் என்ற விதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதனடிப்படையில் பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா உள்பட 5 மாநில தேர்தலுக்கு பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.