கண்டுபிடிப்பு
நாம் எல்லோரும் பார்க்கிறோம், நினைக்கிறோம், சுவைக்கிறோம் கேட்கிறோம், நுகர்கிறோம், வலி உணர்கிறோம், ...இதை எல்லாம் செய்வது யார்? பார்ப்பது கண், நினைப்பது மூளை, சுவைப்பது நாக்கு, கேட்பது காது, நுகர்வது மூக்கு, வலி உணர்வது தோல் என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அப்படித்தான் பொதுப் புத்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது உண்மையா? அப்படிதான் நடக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும். ஏன் நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. அதன் நிஜ முகம்தான் என்ன? நாம் உடலில் எந்த வேலையைச் செய்தாலும், அது முதலில் செய்யப்படுவது மூளையால், அவர் பார்த்த பின்பு, அவர் சுவைத்த பின்பு, அவர் ரசித்த பின்பு, அவர் கேட்டபின்பே நாம் கேட்கிறோம். மூளையாரின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகள் சொன்ன பேச்சு கேட்டுக்கொண்டு ‘கம்’ என்று ‘ஜம்’ என்றும் இருக்கின்றன. இல்லை என்றால் கதை கந்தலாகி விடும். இவைகளை எல்லாம் இணைப்பவை உணர்வு உறுப்பு மண்டலம் (limbic system) என்பவையே.
எனவே இந்த தகவல்கள் எல்லாம் கேட்டு மூளையில் பதிவு செய்து நினைவில் தக்க வைப்பவர் கடல் குதிரை வடிவில் (hippocampus) இருக்கும் hippocampus என்ற உறுப்புதான். இது பெருமூளையின் கீழும், டெம்போரல் காதுப்பை ஒட்டியும், பக்கத்துக்கு ஒன்று இரண்டு, வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் இருக்கின்றன. இதன் பணி என்பது நடந்தவைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த டம்ளரை எங்கே வைத்தேன் என்ற தாற்காலிக நினைவு (short Term), நான் மூணாம்பு படிக்கும்போது, பக்கத்தில் இருக்கும் குமாரைக்கிள்ளினேன், இப்ப அவன் எங்கே இருக்கிறான் என்ற நீண்ட கால நினைவும், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிய உதவும், நிலை உணர்வுகளை தக்க வைப்பது, செயல்படுத்துவது ஹிப்போகாம்பஸ் (Hippocampus) தான். இதனை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடித்தனர். hippo கிரேக்க சொல்லுக்கு குதிரை என்றே பொருளாகும். இது உணர்வு உறுப்பு மண்டலத்ததுடன் (Limbic system) இணைந்துள்ளது.
hippocampus gif பெண்கள் ஆண்களைவிட அதிகமாகவும், ஆழ்ந்தும் வாசனையை உணர்கிறார்கள் என்ற உண்மையை இப்போதுதான் கண்டறிந்துள்ளனர். Hippocampus புதிய நினைவுகளை பதிவு பண்ணவும் அவைகளை பழைய நினைவுகளுடன், பொருத்திப் பார்த்தது காரணம் அறியவும் மிகவும் பயன்படுகிறது.
பொதுவாக பெண்கள் ஆண்களைவிட அதிகமாக வாசனை/துர்நாற்றம் அறிகின்றனர் என்ற பொதுக்கருத்து ஒன்று உண்டு. அது இப்போது உண்மைதான் என சொல்கிறது அறிவியல் (Catherine Paddock, நவம்பர் 2014, Federal University of Rio de Janeiro in Brazil, published in PLOS ONE) தகவல், காரணி என்ன தெரியுமா பெண்களின் மூக்கில் இருக்கும் வாசனைப் பைகளிலுள்ள நுணர்கொம்புகளில் உள்ள செல்கள் அதிக எண்ணிக்கைதான் என்று சொல்கின்றனர். நாம் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம், அதுதான் தெரியமே என்று சொல்லக்கூடாது, அதன் வழியேதான், காற்றினூடே வாசனையும் மூக்குத்தி துளைக்குள் நுழைகிறது. அங்கே மூக்கின் உட்பகுதியிலுள் மெல்லிய சவ்வு சளிபோன்ற திரவத்தால் நனைக்கப்பட்டு இருக்கும், வாசனையில் வரும் மூலக்கூறுகள், நாசித்துளையில் உள்ள சளிபோன்ற திரவத்தில் பட்டால்தான், நாசியில் பட்ட பொருளின் வாசனையை வாசனைப்பைகளில் உள்ள உணர்கொம்புகள் உணரும்.
அது சாம்பார் வாசனையா, நமக்குப்பிடிக்காதா பிரியாணி மசாலாவா அல்லது கமகமக்கும் மைசூர்பாகா என்று வாசனையை மூக்கு பிடித்துவிடும் மணத்திலிருந்தே அது காரமா, இனிப்பா, புளிப்பா, மசாலாவா என்று அறிய முடியும். ஆண் வாசனையா, குழந்தை மணமா, மலமா, மூத்திரமா என்றும் அறியலாம். ஆனால் இப்படி வாசனை பிடிக்கும் தன்மை பெண்களுக்கே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. இப்படி இந்த வாசனைகள் அறியும் திறன் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். அதுதான் நாய்கள் நம்மை மோப்பம் பிடித்து திருடனை, கொலைக்கான காரணம் கண்டுபிடிப்பது. நாயோட வாசனைத்திறனுடன் மனிதன் போட்டியிட முடியாது. வாசனையை மோப்பம் பிடிப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக மற்றும் எளிதில் வாசனையை அறிகின்றனர். இந்த தகவல் சோதனைகள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணி பெண்களின் அறிவார்ந்த ஈடுபாடு மற்றும் உணர்ச்சிமயமான தாக்கங்களால்தான் என்றும், அந்த வாசனை உணர்வுகள் வெறுமனே மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கையால்/திறமையால் மட்டும் அல்ல என்றும் கூறுகின்றனர். இது மூளையை ஸ்கேன் செய்ததின் மூலமும் அதன் அமைப்பு மற்றும் கொள்ளளவும் கூட பெரும்பங்கு வகிக்கின்றன என்பது அறியமுடிந்த தகவல். இருப்பினும் கூட இன்னும் இந்த விஷயத்தில் ஏன் பெண்னுக்கு அதிக வாசனை உணர்வு என்பது விடை தேடிக்கொண்டிருக்கும் வினாவாகவே உள்ளது.
முக்கியமாக உணவு தயாரிப்பில், காபி தயாரிப்பில் பெண்களின் பங்கு முக்கியமானது. உணவில் உப்பு குறைவா அதிகமா என்பதை உப்பை, புளிப்பை, காரத்தை வாசனை மூலம் அனுபவத்தால்/பழக்கத்தால் அறிய முடியும். பொதுவாக வாசனைகள் பழைய நினைவுகளோடு. அவை பயம் கலந்தவையா, சந்தோஷமா, எரிச்சல் தருவதா, நினைக்க நினைக்க இனிப்பதா என பழங்கதைகளின் சொர்க்கமாவும், நரகமாகவும் இருக்கிறது. ஒருவருக்கு ஒரு வாசனையை உணர்ந்துவிட்டால், அவர்களது நினைவுச் சுரங்கத்தில் எண்ணக்குவியல் உடைந்து, அதிலிருந்து அந்த வாசனையை முதன் முதல் உணர்ந்த போது அல்லது அந்த வாசனையை நாம் நுகர்ந்தபோது நடந்த நிகழ்வுகள் கோர்வையாய் சங்கிலித்தொடர்போல மனத்தில் ஓடி வந்து நிற்கும்.எனக்கு மைசூர்பாகு வாசனையை உணர்ந்தாலே, எங்க அப்பா, எங்களுக்கு மைசூர்பாகு செய்து தந்ததும், பழனியில் நடந்த மூட்டா மாநாடடில் அந்த சமையல் வல்லுனர்களிடமிருந்து எப்படி மைசூர்பா செய்வது என நேரில் நின்று கற்றுக்கொண்டதும் நினைவில் ஓடி வந்து குதிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள் வாசனையுடன் தொடர்புபடுத்தி வரும். இப்போது அதன் பின்னணியை, ஏன் இப்படி நினைவுக்கு வருகின்றன என்ற தகவல், The journal Nature Communications என்ற பத்திரிகையில், 2017, ஜூலையில் கண்டறிந்துள்ளனர். மூளை மற்றும் அதிலுள்ள hippocampus பகுதி, நினைவையும் அது தொடர்பான கதைகளையும் இணைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். மலரின் வாசனை காதலியின் நினைவை இழுக்கலாம்.