headlines

img

நெருக்கடியும் நிவாரணமும்

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யுள்ளார். நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தநிலையில் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அந்த மந்தநிலையை போக்குவதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைப்பதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெரும் பகுதி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை நெருக்கடியில் ஆழ்த்துவதாகவுமே உள்ளது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதி யாண்டில் 5 சதவீதமாக உள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாகும் என்றும், இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று கூறுகிறார்.ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்றும் ஆருடம் கூறுகிறார்.ஆனால் அரசே வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருவதையே காட்டுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. தொழில் உற்பத்தி குறியீட்டு எண் 2019 - 20ஆம் ஆண்டு ஏப்ரல்- ஜூலை மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்துள் ளது.கடந்தாண்டு இது 5.6 சதவீதமாக இருந்தது. 

பொருளாதார மந்த நிலை அனைத்துத் துறைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரு கிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு வேலையின்மை 9.94 சதவீதமாக உயர்ந்துள் ளது. இளைஞர்கள் வேலையின்மை 28 சதவீதம் அளவிற்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு,குறு தொழிற்சாலைகள் மட்டுமின்றி பெரிய தொழிற்சாலைகளும் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டு வருவதால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வீதிக்கு விரட்டப்படுகின்றனர். இந்த நிலையை சரி செய்ய வேண்டுமானால் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். மக்க ளின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். ஆனால் மத்தியில் உள்ள மோடி அரசு பங்குச்சந்தையை பற்றி கவலைப்படுகிறதேயன்றி உள்ளூர் சந்தையைப் பற்றி ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. 

அண்மையில் வரிக்குறைப்பு உட்பட நிர்மலா சீதாராமன் அறிவித்த நடவடிக்கைகளால் கார்ப்ப ரேட் முதலாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். பாதா ளத்தில் விழுந்து கிடந்த பங்குச்சந்தை சற்று தலை தூக்கிப் பார்த்தது. இத்துடன் தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக மோடி அரசு கருதுகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து பறிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடி பணமும் கூட பெரு முதலாளிகளுக்கே கைமாற்றி விடப்பட்டது.

பொது முதலீட்டை அதிகரிப்பது, சிறு, குறு தொழில்களின் மீட்சிக்கு உதவுவது, கிராமப்புற  வேலைவாய்ப்புத்திட்டத்தை மேம்படுத்துவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கு வதை நிறுத்துவது, விவசாயத் துறையை பாது காப்பது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள்தான் உதவுமேயன்றி, நெருக்க டிக்கு காரணமான கார்ப்பரேட்டுகளிடம் மட்டுமே கருணை காட்டுவது மந்தநிலையைப் போக்காது. மாறாக மீள முடியாத நெருக்கடிக்குள் தேசம் சிக்கும்.