headlines

img

மின் வாரியங்கள் நட்டத்திற்கு யார் காரணம்?

மின்வாரியங்களின் நட்டத்தைக் குறைக்கக்  கட்டணத்தை உயர்த்துமாறு  மாநில அரசுகளை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான  கோல்  இந்தியா விநியோகம் செய்து வந்தது.  மின்நிலை யங்களுக்கு இந்த  நிலக்கரி ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.  நிலக்கரி விலையை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது ஒரு டன் ரூ.400 என்ற விலையில் இருந்தது. 

தாராளமய, தனியார்மயக் கொள்கையால்  நிலக்கரிச் சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன.  பொதுத் துறை நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி செய்யப் படும் நிலக்கரி முன்பு ஒன்றிய- மாநில அரசுகளின் அனல் மின்நிலையங்களுக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டு வந்தது. ஒரு அனல் மின்நிலையம் அமைக்கும் போதே அந்த நிலையத்திற்குத் தேவையான நிலக்க ரிக்குப் படுகைகள் ஒதுக்கப்படும். ஆனால் இந்த நடைமுறை தற்போது கைவிடப்பட்டு யார் வேண்டு மானாலும் நிலக்கரியை எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவான பின்னர் விலைக் கட்டுப்பாடு ஒழிக்கப்பட்டு விட்டது.  இதனால் சுரங்கங்களை ஏலம் எடுத்த தனியார் நிறுவனங்கள் என்ன விலையைத் தீர்மானிக்கின்றனவோ அந்த விலையை அனல் மின்நிலையங்கள் - அதாவது மாநில அரசுகள் - கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

சரக்கு ரயில்கள் மூலமாக நிலக்கரி கொண்டு செல்லப்படுகின்றது.  சரக்குக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தும் போது நிலக்கரி விலையும்  கடுமையாக உயர்ந்து விடுகிறது. இதனால் கடந்த சில   ஆண்டு களாக வெளிநாட்டிலிருந்து வாங்கும் நிலக்கரிக்கு  நிகராக உள்நாட்டு நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளது. மின் உற்பத்திச் செலவு அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம். 

மின்நிலையங்களை அமைத்து உற்பத்தியைப் பெருக்கத் தேவையான நிதியை ஐந்தாண்டுத் திட்டங்களில்  ஒன்றிய அரசு முன்பு ஒதுக்கீடு செய்து வந்தது.  மின்சாரச் சட்டம் 2003 மற்றும் 1998-இல் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக் கப்பட்ட பின்னர் நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது. இதனால் தேவையான மின்நிலை யங்கள் அமைக்கப்படாத  காரணத்தால் மின் தேவையைப் பூர்த்தி செய்யத் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்திவிட்டது. 

தனியாரிடம் மின்சாரத்தை வாங்கும் போது அதன் விலை  அதிகமாக உள்ளது. இதனால் மாநில மின்வாரியங்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படு கிறது. தமிழகத்தின் அனுபவமே இதற்குச் சரியான சான்று. மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 9 விழுக்காடு மின்சாரத்தை வாங்குவதற்கு 1998 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது  மொத்த வருமானத்தில் 35 விழுக் காடு தொகையைச் செலவிட்டது.  மற்ற மாநிலங்களி லும்  இதே நிலைதான்.  இந்த மோசமான நிலைக்கு மாநில அரசுகள் காரணமல்ல. ஒன்றிய அரசின் கொள்கைதான் காரணம். எனவே நட்டத்திற்கு மாநி லங்கள் மீது குற்றம்சாட்டுவதைக் கைவிட்டு தனது கொள்கையை ஒன்றிய அரசு  மாற்றிக்கொள்ள வேண்டும். அனல் மின்நிலையங்களுக்குக் கட்டு படியான விலையில் நிலக்கரியை ஒன்றிய அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.