headlines

img

பெருமைப்பட ஒன்றுமில்லை!

பிரதமர் மோடி தீபாவளியன்று ராணுவத்தி னர் மத்தியில் உரையாற்றிய போது, உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் பத்தாவது இடத்தில் இருந்த நாம், எட்டு ஆண்டு களில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளோம் என்று பெருமைப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த  எட்டு ஆண்டுகளில் எத்தகைய வீழ்ச்சிகளை நாடு கண்டிருக்கிறது என்பதையும் சொல்லி யிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் எந்தள வுக்கு வசதியும், வாய்ப்பும் வாழ்வாதார மேம் பாடும் பெற்றிருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த நாட்டின் அமைதியான வாழ்க்கை அமை யும் என்பது கண்கூடு. ஆனால் மோடி பிரதம ரான பிறகு நமது நாடு பல வகைகளில் உலக நாடு களைவிட பின்தங்கியிருக்கின்றதைப் பார்த்தால் அவர் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தியாவில் பட்டினி குறியீடு உலக நாடு களை ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு கணக்கின்படி 119 நாடுகளில் நூறாவது இடத்தில் இருந்தது. தற்போது 121 நாடுகளில் 107ஆவது இடத்தில் உள்ளது. அதில் பாஜக ஆளும் மத்தி யப் பிரதேச மாநிலம் மிகவும் அபாயகரமான அளவாக 30.9 என்ற நிலையில் உள்ளது. 

ஒரு நாட்டில் பத்திரிகை சுதந்திரம் எந்தளவு உள்ளது என்பதை பொறுத்தே அந்த நாட்டின் ஜனநாயகத்தின் மதிப்பீடு அளவிடப்படும். இந்தியா 180 நாடுகளில் 150ஆவது இடத்தில் உள்ளது பெருமைக்குரியதல்ல. 

நாட்டின் தொழிலாளர் நிலை மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் நாட்டு மக்களின் பொரு ளாதார நிலைமையை வெளிப்படுத்தக்கூடிய தாக அமையும். அதில் இந்தியா 49ஆவது இடத்தில் உள்ளது. இதில் 15 முதல் 64 வயது வரை உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கி னர் வேலையின்றி உள்ளது நிலைமையின் தீவிரத்தைக் குறிக்கும்.

மக்களின் சுகாதார நிலையைப் பார்த்தால் உலக சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 195 நாடுகளின் பட்டியலில் 66ஆவது இடத்தில் (42.8 புள்ளிகள்) உள்ளது. 

கல்வியில் இந்தியா முதல் பத்து நாடுக ளில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல, தற்போது 33ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் 2018ஆம் ஆண்டில் 40 ஆம் இடத்திலும், 19ஆம் ஆண்டில் 35ஆம் இடத்திலும் இருந்ததைப் பார்த்தால் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

நாட்டு மக்களுக்கு கிடைக்கும் தண்ணீர் அள வைப் பொறுத்தும் தரத்தைப் பொறுத்தும் உலக அளவில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இந்தியா 122 நாடுகளில் 120ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் அசுத்தமான தண்ணீரே 70 சதவீதம் கிடைக்கிறது என்பது கொடுமையானது. 

இது தவிர வீட்டு வசதி செய்து கொடுப்பதில் பிரதமரின் அனைவருக்கும் வீடு என்கிற அளப்புக் கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இவ்வளவு மோசமான நிலையிலும் கூட தங்களைப் பற்றியும்  ஆட்சியை பற்றியும் பிரதமர் பீற்றிக் கொள்வது பெருமைக்குரியதாக இல்லை.