headlines

img

மோதித் தகர்க்க வேண்டிய முடிவு

நான்கு மாநில தேர்தல் வெற்றியை ருசித்த கையோடு, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ரத்தம் குடிக்க தயாராகிவிட்டது ஒன்றிய பாஜக அரசு. 8.5 சதவீதமாக இருந்த தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைத்து, எளிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கி றது மோடி அரசு. 

இது அநியாயமானது என்ற ஒற்றை வார்த்தை யால் கடந்து சென்றுவிடக் கூடிய ஒரு சாதாரண தாக்குதல் அல்ல; கோவிட் ஊரடங்கு காலத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர மான வேலையை இழந்திருக்கிறார்கள்; இழந்த வேலைகள் மீண்டும் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் எவராலும் தரப்படவில்லை. அவர் களுக்கு சேர வேண்டிய பி.எப் தொகைக்கான வட்டி  உள்பட ஒன்றிய அரசால் தற்போது உறிஞ்சப் பட்டு, நிர்க்கதியாக விடப்படுகிறார்கள்.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் தற்போது ரூ.9.4 லட்சம் கோடி தொகை குவிந்தி ருக்கிறது. இது கடந்த நிதியாண்டில் இருந்த ரூ.8.29 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது ஒரே  ஆண்டில் மிகப்பெரும் அளவிற்கு அதிகரித்துள் ளது. இந்த பெரும் தொகை மொத்தமும், தொழி லாளியின் வியர்வையில் நனைந்த பணம். ஆனால், இந்த தொகையை கொடுத்து வைத்துள்ள தொழிலாளிக்கு வெறும் 0.4 சதவீதம் வட்டியை கூட கூடுதலாக வழங்கி விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டிருக்கிறது மோடி அரசின் தொழிலாளர் நலத்துறை.

தொழிலாளர் வைப்பு நிதியில் குவிந்துள்ள தொகையை கொண்டு ஒன்றிய அரசு, பல்வேறு முதலீடுகளை செய்திருக்கிறது. அதன்மூலம் அரசுக்கு 2020-21 இல் ரூ.70,457 கோடியும், 2021-22 இல் ரூ.76,768 கோடியும் வருமானம் கிடைத்தி ருக்கிறது. கடந்த ஆண்டு வட்டி விகிதமாக நிர்ண யிக்கப்பட்டிருந்த 8.5 சதவீதத்திலிருந்து 0.4 சதவீதம் குறைத்து தற்போது 8.1 சதவீதமாக அறிவித்ததன் மூலம் அரசுக்கு ரூ. 450 கோடி மிச்சமாகும் என்று ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

என்னே, மட்டரகமான மகிழ்ச்சி இது.

தொழிலாளியின் பணத்திலிருந்துதானே 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பார்த்தி ருக்கிறீர்கள்; இந்த நிலையில், அவர்களது வயிற்றில் அடித்து 450 கோடி ரூபாயையும் பறிக்கிறீர்களே, இது எத்தனை அவக்கேடானது!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரி யத்தின் முடிவு என்ற பெயரில் வட்டி விகித குறைப் பால் தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்படும் 450 கோடி ரூபாய், நாடு முழுவதும் உள்ள உழைப்பாளி களின் கைகளுக்கு சென்று சேர்ந்தால் அந்த பணம் அவர்களது வாங்கும் சக்தியில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அது பொருளாதாரத்தின் சுழற்சிக்கு உதவி செய்யும்.

கோவிட் காலத்திலும், அதற்கு பின்னரும் வருமானம் இழந்து தவிக்கும் உழைப்பாளிகளின் கைகளில் மாதம் ரூ.7500 ரொக்கமாக அளித்தி டுங்கள் என்று ஒரு நாள் கூட தவறாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதையும் தரவில்லை; மாறாக, பிஎப் வட்டிவிகிதத்தை குறைத்து, உள்ளதையும் பறித்திருக்கிறது மோடி அரசு. இது கடந்து செல்லக் கூடிய முடிவல்ல; மோதித் தகர்க்க வேண்டிய முடிவு.