headlines

img

வயிறெரியச் செய்வதா?

நரேந்திர மோடி ஆட்சியில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கடைசி முழு பட்ஜெட்டை நடுத்தர மக்களின் பட்ஜெட் என்று அவரே கூறிக் கொண்டார். ஆனால் அது எந்தளவு உண்மை என்பதை நாட்டு மக்கள் நன்கறி வார்கள். அந்த  பட்ஜெட்டை எதிர்த்து நாடு முழுவ தும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

மோடி பிரதமராக பொறுப்பேற்கும் போது எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410ஆக இருந்தது.  ஆனால் இப்போது தில்லியில் ரூ.1103ஆக வும், சென்னையில் ரூ.1118ஆகவும் உயர்ந்திருக்கி றது. வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்த்தப்பட்டு ரூ.2119.50 ஆக உயர்ந்திருக் கிறது. சென்னையில் அது ரூ.2268 ஆக அதிக ரித்திருக்கிறது. அத்துடன் ஆட்டோக்களுக்கான திரவ எரிபொருள் விலையும் ரூ.6 உயர்த்தப் பட்டுள்ளது. மொத்தத்தில் இரண்டரை மடங்காக எரிவாயு விலை அதிகமாகியிருக்கிறது. 

நல்லநாள் பிறக்கிறது என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, அவரது நண்பர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நல்ல நாட்களை கொண்டு வந்திருக்கிறாரே தவிர நாட்டு மக்களுக்கு அல்ல என்பதை இந்த ஒன்ப தாண்டு ஆட்சி உணர்த்திக் கொண்டிருக்கிறது. 

ஏழை, எளிய மக்களுக்காக உஜ்வாலா திட்டத்தின் மூலம் எரிவாயு வழங்கி சாதனை படைத்திருக்கிறோம் என்று ஒன்றிய பாஜக அரசு அவ்வப்போது விளம்பரம் செய்து கொண்டி ருக்கிறது. ஆனால் அந்த இணைப்புகளை பெற்ற வர்கள் பத்து சதவீதம் பேர் திரும்ப சிலிண்டர்கள் வாங்கவேயில்லை. 12 சதவீதம் பேர் ஒரு சிலிண்டர் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். 56.5 சத வீதம் பேர் 4 சிலிண்டர்களுக்கும் குறைவாகவே வாங்கியிருக்கிறார்கள். இதுதான் உஜ்வாலா திட்டத்தின் உண்மை நிலை. ஆனால் பிரதமரும் அவரது அமைச்சர்களும் வாயளப்பதில் குறை வேதும் வைப்பதில்லை.

இந்தியாவில் வேலையின்மை, வறுமை அதிகரிப்பு, சிறு,குறு தொழில்கள் முடக்கம், விலை உயர்வு போன்றவற்றால் ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும்பாடாகிக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக வேலையிழப்பு அதி கரித்துக் கொண்டிருப்பதாலும், பெட்ரோல், டீசல்,  எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்க ளின் கடுமையான விலை உயர்வாலும்  மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்திருக்கி றார்கள்.

இந்நிலையில், மூன்று மாநில தேர்தல் முடிந்த மறுநாளே எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது நாட்டு மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் போக்குவரத்துச் செலவும் உணவுப் பொருட்கள் விலைகளும் அதிகரிக்கும்  என்பதால் மக்களுக்கு கூடுதல் சுமைகளே ஏற்படும். எனவே தற்போதைய அநியாய எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெறுவதே நாட்டு மக்களுக்கு நலம் விளைவிக்கும்.