headlines

img

புதுப்புது தந்திரம்

ஒன்றிய ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு பல்வேறு துறைகளில் தோல்வி யைத் தழுவி வருகிறது. இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தைத் திசைதிருப்ப ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குவது அக்கட்சி பரிவாரங்களின் நிகழ்ச்சி நிரலாக மாறியிருக்கிறது.

கர்நாடகாவில் அடுத்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் அம்மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  அதிக இடங்களில் வெற்றிபெற்றது. மக்களிடத்தில்  பாஜகவுக்கும் அதன் அரசுக்கும் ஏற்பட்டுள்ள சரிவை இந்த தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இதனால் உண்மையான பிரச்ச னைகளைத் திசைதிருப்பவும் தோல்விகளை மறைக்கவும் `ஹிஜாப் பிரச்சனையை  உருவாக்கி மாணவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த இந்து த்துவா சக்திகள் முயற்சிக்கின்றன.

அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமையின்படி, இஸ்லாமிய மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு `ஹிஜாப் அணிந்து வருகின்ற னர். ஹிஜாப் அணிந்தபோதிலும் கல்விக்கூடங்க ளில் மற்ற மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிக ளோடு  நல்லிணக்கத்தோடு பழகி வருகிறார்கள். நாடு முழுவதும் மாணவர் சமுதாயத்திடம் காணப் படும் இந்த ஒற்றுமை மத வெறியர்களின் கண்களை உறுத்துகிறது. எனவேதான் கர்நாடகாவில் ஆளும் கட்சியின் ஆதரவோடு கல்விக்கூடங்களில்  இஸ்லாமிய மாணவிகளை  வன்மத்தோடு துரத்துகின்றனர்.

இவர்களை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது அம்மாநில அரசுக்கு நன்றாகவே  தெரியும். இஸ்லாமிய மாணவிகளுக்கு எதி ராகக் கோஷமிட்டு முற்றுகையிட்டவர்கள் மாண வர்கள் அல்ல என்று கர்நாடக கல்வி அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் அவர்கள் கல்வி நிலையத்திற்குள் புகுந்து வன்முறையில் எப்படி  ஈடுபட முடிந்தது? அவர்களை உடனே கைது செய்யாதது ஏன்? என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.

கல்லூரியில் தேசியக்  கொடியை இறக்கி விட்டுக் காவிக் கொடியைக் கட்டியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. மாறாக, “விரைவில் தில்லி செங்கோட்டையில் காவிக் கொடி பறக்கும் என்றும் அதுவே ஒரு காலத்தில் தேசியக் கொடியாக மாறும்’’ என்றும் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா சொல்கிறார்.  இப்படி இவர் கள் பேசுவதன் மூலம் இந்த கலவரத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது தெளிவாகி றது. ஆனால் பிரதமர் மோடி இஸ்லாமிய மாணவிக ளுக்கு பாஜக துணை நிற்கும் என பசப்புகிறார்.

அறிவார்ந்த பாதையில் செல்ல வேண்டிய மாணவர்களை மதம் பிடித்த யானைபோல் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை  மறுக்கப்படுகின்ற போது போராட்டங்கள் எழுவது இயல்பே. இனி மேலாவது மாணவர்களைத் தவறான வழியில் தள்ளிவிடும் போக்கைக் கர்நாடக அரசு  நிறுத்திக்கொள்ளவேண்டும். அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் தவறும்போது நீதிமன்றங்கள் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது.