headlines

img

வேலை நிறுத்தத்தின் வெற்றி ஆள்வோருக்கு எச்சரிக்கை

ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் தேச விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கத்தின் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்று வருகிறது. 

மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி அகில இந்திய சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டு மேடை மார்ச் 28,29 தேதிகளில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தி ருந்தது. இந்த வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழி லாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளதோடு தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் மறியல் செய்து கைதாகி யுள்ளனர். 

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய மக்களுக்கெதிராக குறிப்பாக தொழிலாளி வர்க்கத்திற்கெதிராக ஒரு யுத்தத்தையே தொடுத்துள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளி நலச் சட்டங்களாக மாற்றும் வகையில் சட்டங்களை வெட்டிச் சுருக்கி தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றி யுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பி.எப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. 

கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு முற்றாகப் பறிக்கப்பட்ட நிலையில், தொழிலா ளர்களுக்கு சலுகை வழங்குவதை விட இந்தச் சூழலையும் பயன்படுத்தி முதலாளிகளுக்கே சலுகை மழை பொழிந்தது ஒன்றிய அரசு.

ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல், கேஸ் விலை மீண்டும் விட்டதைப்பிடிக்கும் வேகத்தோடு அன்றாடம் ஏற்றப்படுகிறது. கேஸ் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மானியமும் காணாமல் போய்விட்டது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகின்றது. ஆனால் மக்களின் வாங்கும் சக்தி கொஞ்சம் கூட உயரவில்லை.

விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவு மகத்தா னது. இந்த போராட்டத்தின் வெற்றி புதிய நம்பிக்கை யை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் விரோதச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் விவசாயிக ளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதும் வேலைநிறுத்தத்தின் பிரதான கோரிக்கையாகும்.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனி யார்மயமாக்கப்படுகின்றன. எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் தேசத்தின் சுயசார்புக்கு பெரும் அழிவை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. பொதுத்துறை நிறுவ னங்களை சீரழிப்பது கட்டிடத்தின் அஸ்தி வாரத்தை அசைப்பது போன்றதாகும். 

முறைசாராத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பகுதி தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்களின் உரிமைப் பெரும் போராக நடைபெற்றுவரும் போ ராட்டம் ஒன்றிய ஆளும் கட்சிக்கும், ஆளும் வர்க் கத்திற்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.