headlines

img

தொங்கு பால விபத்தும், துரத்தும் கேள்விகளும்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதிக்கு மேலே இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 142 பேர் பலியாகி யுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது துயர் மிகுந்த செய்தியாகும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நவீன ஐரோப்பிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தப் பாலம் பொறியியலில் அதி சயம் என்று அழைக்கப்பட்டதோடு ஏராள மான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. 

இந்த விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்பு வதாக உள்ளது. விபத்திற்கு பொறுப்பேற்பதாக குஜராத் மாநில பாஜக அரசு அறிவிப்பது மட்டும் போதாது. இந்த உயிரிழப்புகளுக்கு பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் பாலப் பராமரிப்புப் பணிகளை தனி யார் நிறுவனம் ஒன்றிடம் மாநில அரசு ஒப்படைத் துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டி ருந்த இந்தப் பாலம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது தங்க ளுக்கு தெரியாது என்று மாநில அரசு உயரதி காரிகள் கூறுவது பொறுப்பின்மையின் உச்ச மாகும்.

பயன்பாட்டிற்கு திறந்துவிடும் முன் பாலத் தின் உறுதித்தன்மையை மாநில அரசு பரி சோதிக்கவில்லை என்கிறார்கள். அப்படியென் றால் பாலத்தை திறந்துவிட்டது யார்?

இந்த பாலப் பராமரிப்பு பணியை செய்த நிறுவனம் பெரும் தொகையை பாஜகவினருக்கு கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது.

குஜராத்தில் சட்டப் பேரவை தேர்தல் விரை வில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் அறி விக்கப்பட்டால் உடனடியாக நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும். எனவேதான் அவசர அவசரமாக இந்தப் பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. பாஜக அரசின் சாதனை யாக காட்டிக் கொள்ள அவர்கள் செய்த வேலை  நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கி யிருக்கிறது. 

பாலத்தின் தாங்கு திறனைவிட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், டிக்கெட் விற் பதிலேயே கவனமாக இருந்ததாகவும் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது ஒரு விபத்து என்றாலும் நிச்சயம் இதை தவிர்த்திருக்க முடியும். நூற்றாண்டு கால வரலாறு கொண்ட பாலம் திறக்கப்பட்ட ஐந்து நாளிலேயே விபத்துக்கு உள்ளாகிறது என்றால், தனியார்மயத்தின் லட்சணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.இந்த உயிரிழப்புகளுக்கு பாஜக மாநில அரசுதான் முழு பொறுப்பு.