headlines

img

சவுகிதாரா? ஏலதாரரா?

2014இல் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து   இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியே அடைந்திருக்கிறது. பணமதிப்பிழப்பிற்கு பின் ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஜி-20 நாடுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றதால் உலகத்துக்கே தலைமை தாங்குவதாகவும், அதை நாடு முழுவதும் கூட் டங்கள் நடத்தி தங்களது வீரபிரதாபங்களை காட்டப்போவதாகவும் கூறியிருக்கிறார் மோடி. இவரது அரசின் விளம்பரச் செலவுகள் மட்டும் கடந்த எட்டாண்டுகளில் ரூ.6491 கோடியாகும். மின்னணு ஊடகங்களில் விளம்பரச் செலவு மட்டும் ரூ.3260.79 கோடி. இப்படி விளம்பரங்களாலே தலைவராக உலா வந்துகொண்டு தனது ஊதாரித் தனத்தால் நாட்டின் செல்வத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தற்போது நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவ தாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை,  திருச்சி விமான நிலையங்களும் அடங்கும். இந்த  நான்கு விமான நிலையங்களையும் குத்தகைக்கு விடுவதன் மூலம் ரூ.4694 கோடி பணம் திரட்டு வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுபோல் மற்ற விமான நிலையங்களும் குத்தகைக்கு விடப் படுவதன் மூலம் ரூ.13945 கோடி திரட்ட திட்ட மிட்டுள்ளது மோடி அரசு.

தேசிய பணமாக்கல் திட்டம் என்பதன் பெய ரில் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் காரியத்தில் மோடிஅரசு மிகத் தீவிரமாக வேலை செய்கிறது. அதற்கு ஆதாயம் இல்லாமல் இருக் குமா? இவர்கள் விற்கும் துறைகளை வாங்கும் நிறு வனங்கள், பாஜகவுக்கு மிகமிகத் தாராளமாக நன்கொடைகளாக தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் நிதியை வாரி வாரி வழங்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும். 

அதே நேரத்தில் இத்தகைய கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு அதன் முதலாளிகளுக்கு அரசு  வங்கி களின் கடன் தள்ளுபடியும் மோடி அரசால் தாராள மாக செய்யப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,09,511 கோடி வராக் கடனை செயல்படாத சொத் தாக அதாவது வசூலிக்காத, வஜா செய்கிற கடனாக வரையறுத்துள்ளதாக கூறியுள்ளார். 

கடந்த காலத்தில் நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களையே விற்பதாக கூறப்பட்டது. பின்னர் லாபம் தரும் நிறுவனங்களையும் விற்கலா யினர். இவர்களது இலக்கு நாட்டின் பொதுச் சொத்துக்களை செல்வ வளங்களை பாதுகாப்ப தல்ல; அதை தனியார் முதலாளிகளுக்கு குறிப்பாக கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதே. மோடி தன்னை நாட்டின் சவுகிதார் (காப்பாளர்) என்று முன்பு கூறினார். ஆனால் இப்போதோ அவர் கலைப்பாளராக, விற்பனையாளராக, ஏலதாரராக ஆகியிருக்கி றார். இந்நிலை மாற வேண்டுமானால் இந்த ஆட்சி அகற்றப்படுவது காலத்தின் கட்டாயம்.

2021- 22 ஆம் ஆண்டு வரை கடந்த 4 ஆண்டுக ளில் வங்கிகள் ரூ.8,48,186 கோடி கடனை தள்ளு படி செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.