headlines

img

சொத்து வரி உயர்வை திரும்பப் பெறுக!

கொரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு அனைத்துப் பகுதி மக்களின் வாழ்க்கை யையும் புரட்டிப் போட்டு விட்டது. ஒன்றிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்ப தற்கு பதிலாக அடுத்தடுத்து அதிர்ச்சியளித்து வரு கிறது. ஐந்து மாநில தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் கடுமையாக உயரத் துவங்கி யுள்ளது.

குடும்பப் பொருளாதாரத்தை நிலை குலைய வைக்கும் வகையில் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் என்பது கிட்டத் தட்ட நிறுத்தப்பட்டு விட்டது. சுங்கக் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பல முனைத் தாக்குதலால் மக்கள் நிலை குலைந்துள் ளனர். டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்கு வரத்துக் கட்டணம் உயர்ந்துள்ளதால் காய்கறி மற்றும் மளிகைச் சாமான்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் கடும் நெருக்கடி யில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவைத்  தொகை தரப்படாததால் மாநில அரசுகள் திணறும் நிலை உள்ளது என்பது உண்மைதான். தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்க ளை அறிவித்து வந்தபோதும், சொத்து வரியை உயர்த்தியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக மக்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறி யுள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிக ளில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிக பட்ச மாக நூறு சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட் டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியில் 25 சதவீதம் முதல் 150 சதவீதமும் ஏனைய மாநக ராட்சிகளில் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை யும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கூறியதாலேயே சொத்து வரியை உயர்த்தியுள்ளோம் என்று தமிழக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். உள் ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் அளிக்க வேண்டுமானால் சொத்து வரியையும் தள வீதங் களையும் உயர்த்த வேண்டுமென்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்திக்கேற்ப ஒவ்வோராண்டும் சொத்து வரியை உயர்த்த வேண்டுமென்றும் 15வது நிதிக்குழு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் உரிமை இந்தியா 20 மற்றும் அம்ரூட் -20 திட்டங்களிலும் இந்த நிபந்தனை உள்ளது என மாநில அமைச்சர் கூறியுள்ளார். இதை தவிர்ப்பதற்கு மாநில அரசு முயல வேண்டும். மாறாக ஏற்கெனவே கடும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ள மக்களை மேலும் சிரமப்படுத்துவது சரியல்ல. 

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி வாடகைக்கு குடியிருப்போரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடிநீர்க் கட்டணமும் உயரும் அபாயமும் உள்ளது. கடந்த ஆட்சி யில் 200 சதவீதம் வரை உயர்த்தியதாக அமைச்சர் நேரு ஒப்பிட்டுக் காட்டுவது மக்களின் துயரத்திற்கு தீர்வாகாது. எனவே சொத்து வரி உயர்வு அறி விப்பை திரும்பப் பெற மாநில அரசு முன் வரவேண்டும். ஒன்றிய அரசும் நியாயமற்ற பரிந்துரைகளையும் நிராகரிக்க வேண்டும்.