headlines

img

தடம் மாறாதிருக்கட்டும்!

நாட்டின் குடியரசு தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராம்நாத் கோவிந்த் ஞாயிறன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது உரையில், நாம் பயணிக்கும் ஜனநாயகப் பாதையை வரை யறுத்தது அரசியல் நிர்ணய சபை என்றும், அதில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு  நமக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது என்றும் கூறியிருக்கிறார். 

அத்துடன் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோ தரத்துவத்தை கொள்கைகளாக அங்கீகரிக்கும் வாழ்க்கை முறைதான் சமூக ஜனநாயகம் என்று அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றி ருந்த சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கர் தெரிவித்தி ருந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் நடக்கும் பாதையோ ஜனநாயக ரீதி யிலானது போன்று இல்லை. அது தனிநபர் எதேச்சதிகார பாணியிலேயே அமைந்திருக்கி றது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ப தெல்லாம் அதன் கண்களிலோ காதுகளிலோ தென்படவும், புலப்படவும் இல்லையென்றே அதன் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கல்வி யும், சுகாதாரமும் இருந்துவிட்டால் தாங்கள் செல்ல வேண்டிய திசையை குடிமக்கள் கண்டறிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உதவும் என்றும்  குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது முன்னோர்களின் காலடித் தடங்களை பின்தொடர்ந்து செல்ல வேண்டியது மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இன்றைய நிலையோ, தடத்தில் நடப்பதல்லாமல் தடத்தையே மாற்றுகிற வேலை யில்தான் ஒன்றிய பாஜக அரசு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான் ஆட்சி க்கு எதிரான குரல் எழுப்புவோரை தேச விரோதி கள் என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்கிற ‘சீரிய பணியை’ செய்து கொண்டிருக்கிறது.

“எனது சேவையில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் நாம் மகாத்மா காந்தியை நினைவு கூருவது வழக்கம். அவரின் வாழ்க்கையையும், அவர் கற்பித்தவற்றையும் தினந்தோறும் சில நிமி டங்களாவது அனைவரும் நினைவு கூருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று ராம்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் நடப்பதென்னவோ காந்தியின் சமூக நல்லிணக்க, மதச்சார்பற்ற தன்மையை குலைக் கின்ற வேலையே. அதுமட்டுமின்றி நாட்டின் கூட்டாட்சி முறையையும் மதச்சார்பின்மையை யும் ஒழித்துக் கட்டி ஒற்றை ஆதிக்க இந்துத்துவா ஆட்சி முறையை கொண்டு வருவதற்காக அரசி யல் சட்டத்தையே திருத்துகிற வேலையை பகுதி பகுதியாக செய்யத் துவங்கிவிட்டது பாஜக அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றும் கூறுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்கிற எண்ணத்திலேயே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், ஆட்சியா ளர்கள் ராம்நாத் கோவிந்த் கூறுவதைப் போல சில நிமிடங்களாவது மகாத்மா காந்தியை, மத நல்லிணக்கத்தை நினைவு கூர்வார்களா?