headlines

img

குறுக்குவழி குருவே...

குறுக்கு வழி அரசியல் நாட்டை அழிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். உண்மைதான். அதைத்தானே நீங்களும் உங்கள் சகாக்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் தளங்களிலும் ஜனநாயக நெறி முறைகளை, மதச்சார்பற்ற தன்மையை, சமத்துவக் கோட்பாடுகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜண்டாக்களை -மனு(அ)நீதிக் கொள்கை களை, நடைமுறைகளை நாட்டு மக்கள் மீது திணித்துக் கொண்டு அரசியல் சட்ட விதி களை மீறிக் கொண்டிருக்கும் நீங்களா குறுக்கு வழி அரசியல் நாட்டை அழிக்கும் என்று சொல்வது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை குறுக்குவழியில் கவிழ்த்து அதை கைப்பற்றிக்  கொள்வதில் பாஜகவுக்கு போட்டியாக யாரைச் சொல்ல முடியும்? மிகக் கடைசியாக அவ்வாறு ஆட்சியைப் பிடித்தது இதே மகாராஷ்டிர மாநிலத்தில் தானே. அதற்கு முன்னே எத்தனை மாநிலங்கள்? பாஜகவுக்கு மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்ததைவிட குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த மாநிலங்கள் தானே அதிகம்!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்த ஆட்சிக்கு தங்களது ஏஜண்டுகளான ஆளு நர்கள் மூலம் குடைச்சல் கொடுப்பது உங்களது குறுக்கு வழி அரசியல் தானே. அனைத்து மக்க ளும் கல்வி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் தானே நீட், கியூட் என்று நுழைவுத் தேர்வுகளை திணித்துக் கொண்டிருக்கிறது உங்கள் அரசு. அதன் மொத்த வடிவம்தானே தேசிய கல்விக் கொள்கை?

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது, உணவுப் பொருட்கள் வழங்குவது, வரி வருவாய் பகிர்வில் பாரபட்சம் காட்டுவது என அநீதி இழைப்பது குறுக்கு வழி அரசியல் இல்லையா? புழுங்கல் அரிசியை விரும்பிச் சாப்பிடும் கேரள மக்களுக்கு பச்சரிசி வழங்குவது குறுக்கு வழி அரசியல் பழிவாங்கல் இல்லையா?

தற்போது அரசு கருவூலத்தின் ஒவ்வொரு பைசாவும் இளம் தலைமுறையினரின் ஒளிமய மான எதிர்காலத்துக்காக செலவிடப்படுகிறது என்று கூறியிருக்கிறீர்கள். குஜராத்தின் மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவ மனைக்கு பார்க்கச் செல்வதற்காக செய்யப்பட்ட ரூ.30 கோடி செலவும் அப்படிச் செய்யப்பட்டது தானா? இது குறுக்கு வழி அரசியல் இல்லையா?

நாடாளுமன்றத்தை புறக்கணித்து விட்டு, பெரும்பான்மை மூலம் ஜனநாயகப் படுகொலை செய்து கொண்டிருப்பது குறுக்கு வழி அரசியல் இல்லையா? இத்தகைய குறுக்கு வழி அரசியல் செய்யும் உங்களை நாட்டு மக்கள் கட்டாயம் புறக்கணிப்பார்கள். அது தில்லி மாநகராட்சி தேர்தலிலும், இமாச்சலப் பிரதேசத் தேர்தலிலும் தற்போது நடந்திருக்கிறது. இனி 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அது நடக்கும்.