headlines

img

ஊருக்கு உபதேசம்!

புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழாவைப் பிரதமர் மோடி காணொளி முறையில் துவக்கி வைத்து உரையாற்றியிருக்கிறார். அப்போது வழக்கம் போல் பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முற்பட்டிருக்கிறார்.  

இந்திய இளைஞர்களின் திறமையை வளர்ப்ப தற்காகவே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப் பட்டிருக்கிறது. இளம் பெண்களின் வளர்ச்சிக்கா கவே அவர்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் வளர்ச்சி யைக் கண்கூடாகக் காண்கிறோம் என மோடி மெய்சிலித்திருக்கிறார். 

ஆம் வளர்ச்சிதான், கடந்த டிசம்பர் மாதம்  மட்டும் நகர்ப்புற வேலையின்மை 9.3 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. கிராமப்புற வேலையின்மை 7.28 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. 2020 இல்  உலக பட்டினிக் குறியீடு பட்டியல்  94ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2021ல் 101ஆவது இடத்தி ற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நம்மை விட 15 நாடுகள் மட்டுமே பின்தங்கி இருக்கின்றன. 

பெண்களின் வளர்ச்சிக்காகவா அவர்களின் திருமண வயது  21 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது? உண்மையில் பெண்கள் வளர்ச்சியின்  மீது  அக்கறை இருக்குமானால், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஏன் நிறைவேற்றவில்லை?  கடந்த 7 ஆண்டுகளில்  76 அவசர சட்டங்களை இயற்றிய பிரதமர் ஏன் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை?  இந்தியாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற் பட்டவர்கள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட் டுள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். உயிரோடு, ஆரோக்கியமாக இருந்தால்தான் திருமணம் முடிக்க முடியும். திருமண வயதை உயர்த்துவதால் மட்டும்  வளர்ச்சியை எட்டிட முடியுமா? இது ஒன்றிய அரசின் தோல்வியை மூடிமறைக்கும்  சித்துவிளையாட்டாகும். 

இளைஞர்களின் திறமையை வளர்ப்ப தற்கா புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டி ருக்கிறது?  இருக்கும்  இட ஒதுக்கீட்டையும் காலி செய்து, குலக்கல்வி திட்டத்தைக் குறுக்கு வழியில்  புகுத்தும் உத்திதான் புதிய கல்விக் கொள்கை என்ப தைத் தமிழகம் அறியும். அதனால்தான் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில்  ஓபிசிக்கு 27 சத விகிதத்தை உச்சநீதிமன்றம் சென்று தமிழகம் உறுதி செய்திருக்கிறது.

இந்தியர்கள் இந்தியப் பொருட்களையே வாங்க வேண்டும். நாட்டில் உள்ள ஏழைகளுக்குச் சரியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இளை ஞர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். பிரதமர் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பகுதி பொருட்கள் இந்திய தயாரிப்புகளா ? அண்மையில் வாங்கிய காரும் வெளிநாட்டுத் தயாரிப்புதானே.

2016 மற்றும் 2020க்கு இடையில் முகேஷ் அம்பா னியின் நிகர சொத்து மதிப்பு  350 சதவீதம் அதிக ரித்துள்ளது. கௌதம் அதானியின் நிகர சொத்து  மதிப்பு 750 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற பெரும் பணக்காரர்களும் ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தை 75 முதல் 85 சதவீதம் வரை அதிகரித் துள்ளனர். ஆனால் இந்தியா பட்டினி குறியீட்டுப் பட்டியலில் 101ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டி ருக்கிறது. இதுதான் ஏழைகளுக்கு மோடி கொடுத் திருக்கும் முக்கியத்துவம். பொய் நெல்லை குத்தி மோடி வைக்கும் பொங்கல் ஒரு போதும் ருசிக்காது.