பிரதமர் மோடி 2014 மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன. வாக்குறுதிப்படி வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, வேலை யில் இருந்தவர்கள் வீதிக்கு விரட்டப்பட்டதோடு புதிய வேலைவாய்ப்புகளும் அருகிவிட்டன.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதம் 8சதவீத மாக இருந்த நிலையில் டிசம்பரில் 8.30சதவீத மாக அதிகரித்துள்ளது. கடந்த 16 மாதங்களோடு ஒப்பிடும் போது இதுவே அதிகபட்ச அளவாகும்.
கொரோனா நோய் ஏற்படுத்திய பொருளா தார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கு இடது சாரிக் கட்சிகள் முன்வைத்த எந்த ஆலோசனை யையும் மோடி அரசு காதில் போட்டுக் கொள்ள வில்லை. மாறாக இந்த நெருக்கடியையும் பயன் படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கான சலுகை களை வாரி வழங்கியது. சிறு-குறு மற்றும் நடுத்தரக் தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க எந்த வொரு நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ள ப்படவில்லை. இதனால் பெரும்பாலான சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடுவிழா கண்டுவிட்டன.
கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களு க்கு ஓரளவு வேலைவாய்ப்பு வழங்கக்கூடியதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வழங்குகிறது. ஆனால் இந்தத்திட்டத் திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தையே முடக்கிட மோடி அரசு முயன்றது. கடுமையான சமூக அழுத்தத்தின் காரணமாகவே வேண்டா வெறுப்பாக இந்தத் திட்டம் தொடரப்படுகிறது.
வேலையின்மை என்பது ஒரு பொருளாதாரப் பிரச்சனையாக மட்டுமின்றி ஆழமான சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது. விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறிக் கொண்டி ருப்பதால் விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங் களுக்கு அத்துக்கூலிகளாக புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. இது பல்வேறு பிரச்சனை களை ஏற்படுத்துகிறது.
மறுபுறத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிக் கொண்டே இருப்ப தால் விரக்தியில் விழும் இளைஞர்களை பல்வேறு சாதி, மத மற்றும் சமூகவிரோத சக்திகள் குறி வைத்து தங்களது தீயநோக்கங்களுக்கு பயன்படு த்திக் கொள்கின்றன. போதைப் பழக்கம் அதி கரித்து வருவதற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக வேலையின்மை பிரச்சனை அமைந்துள் ளது.
ஆனால் இதுகுறித்து ஒன்றிய அரசு சற்றும் கவலைகொள்வதாக இல்லை. அரசுப் பணி என்பது பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படை யிலானதாக மாறிவிட்டது. மோடி அரசு தற்போது பின்பற்றும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.