கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடியின் ‘பாசமழை மேகம்’ அந்த மாநிலத்தை நோக்கி திரும்பியுள்ளது. அந்த மாநிலத்தில் 2200 கோடி ரூபாய் நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
தன்னுடைய வழக்கமான இரட்டை என்ஜின் பார்முலாவை கர்நாடகத்திலும் அவிழ்த்து விட்டுள்ளார் பிரதமர். அதாவது ஒன்றியத்தி லும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடைபெறுவதால் தான் கர்நாடகம் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநி லங்களில் ஊழலும், லஞ்சமும், வறுமையும், வேலையின்மையும்தான் வளர்ந்துள்ளன. மாறாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் மேம்பட்டுள்ளன.
தென்மாநில அளவில் எடுத்துக் கொண்டால் கூட இடது முன்னணி ஆளும் கேரளம், திமுக ஆளும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கர்நாட கத்தை விட பல்வேறு துறைகளில் முந்தியுள்ளன. உ.பி, கர்நாடகம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநி லங்களில் மக்களிடையே மதப் பகைமை தொடர்ந்து விசிறி விடப்படுகிறது. ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒருபுறத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என வலை விரிப்பது, மறுபுறத்தில் மதவெறி அடிப்ப டையில் மக்களை துண்டாடுவது என்பதுதான் பாஜக பின்பற்றும் இரட்டை என்ஜின் பார்முலாஆகும்.
கர்நாடக பாஜக அரசு ஊழலில் உச்சம் தொட் டுள்ளது. எனவே தான் முதல்வர்கள் மாற்றப்படு கிறார்கள். இப்போது முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை ஆட்சி மீதும் ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. உதாரணமாக பள்ளிகளுக்கு அங்கீ காரம் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ள தாக 13ஆயிரம் பள்ளிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. கட்டுமான ஒப்பந்தம் உள்பட பல்வேறு ஊழல்கள் வெளிவந்து கர்நாடக பாஜக அரசு நாறிக்கிடக்கிறது. இதன் மீது வாசனை திரவி யம் ஊற்ற பிரதமர் வாய்ஜாலம் காட்டுகிறார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர். இதனால் பதவி இழந்தவர். ஆனால் சாதி அடிப்படையில் வாக்குகளை கவர்வதற் காக எடியூரப்பாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர். அவர் மீதும் அவர் மகன் மீதும் பெங்க ளூர் பெருநகர வளர்ச்சி குழும குடியிருப்பு கட்டு மான ஊழல் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள் ளது. மேலும் பல குற்றச்சாட்டுகளும் உள்ளன.
ஆனால் ஷிவமொகா விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட முன்வந்ததாகவும் அவர் பெருந்தன்மையாக அதை மறுத்து விட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார். விமான நிலைய திறப்பு விழாவில் ஹவாய் செருப்பு அணிந்தவரும் விமானத்தில் பறப்பதாக பெருமை பேசியுள்ளார் பிரதமர். நாட்டுக்கென்று இப்போது சொந்த விமான கம்பெனி எதுவும் இல்லை. விமான நிலையங்களும் அதானி உள்ளிட்டவர்களுக்கு பங்கு வைக்கப்படுகின்றன. இதில் பெருமை பேச என்ன இருக்கிறது?