இந்திய நாட்டை முன்னேற்ற 22 மணி நேரம் தூங்காமல் வேலை செய்கிறார் மோடி என்று அவரது அடிப்பொடிகள் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு நாடு எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்றால் பட்டினிப் பட்டியலில் ஏற்கெனவே இருந்த இடத்தை விட்டு பின்தங்கியிருக்கிறது என்பதுதான்.
ஆனால் ஏழை, எளிய மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளையடித்து கார்ப்பரேட் நண்பர்க ளுக்கும் பெரு நிறுவன முதலாளிகளுக்கும் வாரி வழங்குவதையே தங்கள் கடமையாகச் செய்து கொண்டிருக்கிறது மோடியின் ஒன்றிய பாஜக அரசு. அத்துடன் நாட்டின் செல்வங் கொழிக்கும் துறைகளையெல்லாம் பெரு முதலா ளிகளுக்கு தாரை வார்க்கும் காரியத்திலேயே கண்ணாயிருக்கிறது.
இதன் விளைவு மோடிக்கு அணுக்கமான கவுதம் அதானி உலகப் பணக்காரர்களில் 10ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இது வரை அந்த இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 11ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது தனி. ஆனால் கடந்த 14 நாட்களில் 12 நாட்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தியி ருக்கிறது மோடி அரசு. இப்படியே போனால் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.275 ஆக ஆகிவிடும் என்று எச்சரித்தி ருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
ஆனால் கொஞ்சம் கூடநாக்கூசாமல் அனை வருக்கும் சமநீதி என்ற கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது என்றும் ஒரு தரப்பை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியல் பாஜக ஆட்சி யில் இல்லை என்றும் ஒன்றிய அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார். அவர்களது சமநீதியும் திருப்திப் படுத்தும் தன்மைக்கு இதைவிட விளக்கமும் வேண்டுமோ?
இந்தியாவில் இஸ்லாமியர் பிரதமரானால் 50 சதவீத இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படு வர். 40 சதவீதம் இந்துக்கள் கொல்லப்படுவார் கள். 10 சதவீத இந்துக்கள் அகதி முகாம்களி லோ வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றோ தான் வாழ முடியும். இதனைத் தடுக்க வேண்டுமென் றால் நீங்கள் உரிய ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டும் என்று தில்லியில் ஹிந்து மகாபஞ்சாயத்து கூட்டத்தில் தசனாதேவி கோவில் தலைமை அர்ச்சகர் யதிநரசிங்கா னந்தா என்பவர் பேசியிருக்கிறார்.
இப்படிப் பேசுவதற்கான ஊக்கத்தை எங்கிருந்து பெறுகிறார்கள் இத்தகைய மதவெறி வன்முறையாளர்கள். அண்மைக் காலத்தில் ஹரித்துவாரில் நடந்த சாமியார்கள் கூட்டத்தில் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று பேசியதற்கு நாட்டின் பிரதமரோ, ஒன்றிய அமைச்சர்களோ கண்டனம் கூடத் தெரிவிக்க வில்லையே. இது யாரை திருப்திப்படுத்துவது? அதுதானே இத்தகைய நரவேட்டைப் பேச்சு பேசுபவர்களுக்கு தெம்பூட்டும் டானிக். இத்தகைய நரவேட்டையை குஜராத்தில் 2002ல் நடத்தியவர்கள் தானே இன்றைய பிரதமரும் உள்துறை அமைச்சரும். இதுதானே பாஜகவின் சமநீதியும் திருப்திப்படுத்தும் அரசியலும். இதற்கு முடிவு கட்டுவதே நாட்டுக்கு நலம் விளைக்கும்!