headlines

img

மலிவானதா மனித உயிர்கள்?

மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய மருந்துகளே, உயிரைப் பறித்தால் என்ன நடக்கும்? யோசிக்கவே மனம் பதைபதைக்கிறது. ஆனால் அது போன்ற அவலங்களும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதற்காக ஒரு நிறுவனம் கூட உரிய முறையில் தண்டிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

கடந்த மாதம் மட்டும் அரசு மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம்  ஆய்வுக்குட் படுத்தப்பட்ட 1487 மருந்துகளில்  83 மருந்துகள் தர மற்றவை என உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இந்த  தரம் குறைந்த மருந்துகளை எத்தனை பேர் உட்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஏற் பட்டிருக்கும் பாதிப்பு என்ன என்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை? அந்தப் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?

இது ஏதோ முதல் முறையல்ல,   இமாச்சல் பிரதே சம் மற்றும் ஜம்மு -காஷ்மீரில்  இருமல் மருந்து  குடித்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந் தன. ஆய்வில் இருமல் மருந்தில் இருந்த டை எத்திலீன் கிளைகோல், குழந்தைகளின் சிறுநீர கத்தைச் செயலிழக்கச் செய்து உயிரைக் குடித்தி ருக்கிறது என்பது தெரியவந்தது. அவ்வளவு ஏன்,  ஒன்றிய அரசின் ஜன் ஔஷதி திட்டத்தில் வழங் கப்பட்ட மருந்துகளில்  5 தரமற்றவை என்பதும் சமீ பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் ஒன்றிய அரசு மருந்துகளை கண்காணிப்பதன் லட்சணம்.

தரம் குறைந்த மருந்துகள் மட்டுமல்ல,  போலி மருந்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதி கரித்திருக்கிறது. இந்திய மருந்து சந்தையில் போலி  மருந்துகளின் வளர்ச்சி 400 சதவிகிதம் இருப்ப தாக  ஒன்றிய சுகாதார அமைச்சகமே தெரிவிக்கி றது. புதுதில்லியில் மட்டும்  20 சர்வதேச மருந்து நிறுவனங்களின் பெயரில் ரூ. 8 கோடி மதிப்பிலான புற்றுநோய்க்கான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.   இந்த மருந்துகளை உட்கொண்ட வர்களின் கதி என்னவாயிருக்கும்?

ஆனால் பிரதமர் மோடியோ “ இந்தியா உலகின் மருந்தகம்” என வர்ணிக்கிறார்.  ஆனால் இந்தியா வில் மொத்தமே 47ஆய்வகங்கள்தான் உள்ளன. இதில் 6 ஒன்றிய அரசின் ஆய்வகங்கள்.இவற்றில் 8 ஆயிரம் மருந்துகள் வரை மட்டுமே பரிசோ திக்க முடியும். உலக சுகாதார நிறுவனம் வகுத் துள்ள நெறிமுறைகளின் படி; இந்தியாவில் மருந்து களின் தரத்தைச் சோதிப்பதற்குப் போதியளவு ஆய்வகங்கள் கூட இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.

பிரதமரின் நெருங்கிய நண்பர் பாபா ராம்தே வின்  திவ்யா பார்மசி உள்ளிட்ட 16 இந்திய நிறுவ னங்களின் மருந்துகள் தரம் குறைந்தவை என  நேபாள அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் அந்த நிறுவனங்களின் மருந்துகள் இந்தியாவில் இன்றளவும் விற்பனையில் இருக்கிறது. மறு ஆய்விற்குகூட உட்படுத்தவில்லை. இந்த நிறு வனங்கள் பாஜகவிற்கு அதிகளவில் நன்கொடை அளிக்கின்றன என்பதற்காக மனித உயிர்களை பலி கொடுக்க அனுமதிக்கலாமா? தரமற்ற மருந்து நிறுவனங்களை உடனே தடை செய்திட வேண்டும்.