headlines

img

வருமுன் காப்போம்!

சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  மேல்முறையீடு செய்திருப்பது சரியான நட வடிக்கையாகும். இது பாராட்டுக்குரியது.

ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று காட்டிக் கொண்டாலும், அதன் செயல்பாடுகள் திட்டமிட்ட அடிப்படையில் மக்க ளிடையே மதரீதியான பிளவை உருவாக்குவதா கவே இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் இன் வரலாறு இதுதான்.  

அதன் கோட்பாடுகள் முழுவதும், இந்திய அரசியல் சாசன விழுமியங்களுக்கு நேர் எதிரான வையாகவே இருக்கிறது. குறிப்பாக மதச் சார்பின்மை கூடாது.  பாரதத்தை இந்தியா ஏமாற்று கிறது. அகண்ட பாரதம் அதுவும் இந்துராஷ்டிரம் தான் என்பதுதான் அதன் கொள்கை. அதை நோக்கியே ஆர்எஸ்எஸ் இன் ஒட்டுமொத்த செயல்பாடும் இருக்கிறது. 1949 செப்டம்பரில் லக்னோ  பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் அரச மைப்புச் சட்டம், “பாரதத்தினருக்கு எதிரானது’’ என கோல்வால்கர் வெளிப்படையாகவும் பேசி இருக்கிறார். இதையெல்லாம் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்கிறதா ?  இதை எப்படி மற்ற ஜனநாயக இயக்கங்களுடன் ஒப்பிட முடியும்?

அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் மண்டைக்காடு கலவரம் துவங்கிப் பல இடங்களில் மதக்கலவரங்களுக்குப் பின்புல மாக ஆர்எஸ்எஸ் இருந்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி போன்ற ஆன்மீக நிகழ்வுகளைப் பயன்படுத்தி மதக்கலவரங்களை ஏற்படுத்திய திலும் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது.

2006 – 2008 வரை மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜவுதா தொடர்வண்டி குண்டுவெடிப்பு, ஐதரா பாத் மெக்கா மசூதி, ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா  குண்டுவெடிப்பு என அனைத்தும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய  சங்பரிவார் கும்பல் திட்டமிட்டுச் செய்தவை என  தீவிரவாத தடுப்புப்படை உறுதி செய்திருக்கின்றது.  இதை முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் யஷ்வந்த் சிண்டே நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார். இதுதான் ஒரு அமைப்பின்  கலாச்சாரம் என்றால் இந்த கலாச் சாரத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதா?

காந்தியைப் படுகொலை செய்ததும், காம ராசரைக் கொலை செய்ய முயன்றதும் தனிநபர்கள் சார்ந்தது அல்ல; ஆர்எஸ்எஸ் இன் சித்தாந்த செயல்பாட்டின் விளைவே.  தமிழ்நாட்டின் சட்டம்  ஒழுங்கையும், அமைதியையும், மத நல்லிணக் கத்தையும் சீர்குலைக்கத் திட்டமிடும் ஆர்எஸ்எஸ் இன் சதித் திட்டத்திற்கு நீதிமன்ற மும் இரையாகிடக் கூடாது. ஆர்எஸ்எஸ் கும்ப லின் சதித் திட்டத்திலிருந்து தமிழ்நாடு மக்களை  பாதுகாக்க மாநில அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு, அனைத்து ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும். அது நமது கடமையாகும்.