headlines

img

பித்தம் தலைக்கேறி...

ஒரு மல்யுத்தக்காரரைப் போல வெறியுடன் முதல்வருக்கு சவால் விடுகிறார் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான். தைரியம் இருந்தால் ஆளுநர் மாளிகைக்கு வாருங்கள்; என்னை சாலையில் இழுத்து தாக்குங்கள் என்கிறார். அதுமட்டுமல்லாமல் உங்களைப் பற்றித் தெரியாதா? ஒரு போராட்டத்தின் போது ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய போது நீங்கள் (பினராயி விஜயன்) என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சித் தலை வரைப் போல பேசுகிறார். 

இவை அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் பதவி ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருப்பதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் சட்டங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி ஆட்சிக்கு உதவிகரமாக இருப்பதாகும். சட்டமன்றம் நிறை வேற்றும் சட்டங்களில் சந்தேகம் எழுந்தால் விளக்கங்கள் கேட்கலாம். சரி செய்யச் சொல்ல லாம். சரி செய்த பிறகு ஒப்புதல் அளிக்கலாம். மாநில சட்டமன்றத்தில் அரசின் சாதனைக ளை, திட்டங்களை, ஆளுநர் உரையாக வாசிப்ப தற்கு காரணம் அரசும் ஆளுநரும் இணைந்து இயங்குவதற்குத்தான். 

ஆனால் இத்தகைய நடைமுறைகளை மீறி பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் தமிழ்நாடு. கேரளா  உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பு வகிப்பவர்கள் தாங்களே நேரடியாக செயலில் இறங்குவதும், மாநில முதல்வருக்கு உத்தரவிடுவதும் என வரம்பு மீறுதலும் அத்துமீறலும் எல்லையின்றி போய்விட்டது.

தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இத்தகைய எல்லை மீறல்கள், அத்துமீறல்க ளில் ஈடுபடுவதும் நேரடி நடவடிக்கைகளில் இறங்குவதும் வாடிக்கையாகி விட்டது. அத்து டன் ஆர்எஸ்எஸ், பாஜகவின் தலைவர்கள் பேசு வது போல் அரசியல் பேசுவதும் அவரது அன்றாட வேலையாகி அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனம்  செய்வது அதிகமாகி விட்டது.

தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் கூடுதல் ஆளுநராக நியமிக்கப் பட்ட தமிழிசை, புதுவையின் அன்றாட அரசி யல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அத்துடன் இப்போது தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியலை பேசுகிறார். அதற்கெதிராக விமர்சனம் வந்தால் சிலந்தியால் சிங்கத்தை ஒன்றும் செய்ய முடி யாது எரிமலையால் இமயமலையை வீழ்த்த முடியாது என்று வீரம் பேசுகிறார்.

மொத்தத்தில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மாநில ஆட்சிக ளுக்கு இடையூறு செய்வதையே கடமையாகக் கொண்டுள்ளனர் ஆளுநர்கள். இந்நிலை யில்தான் தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை சந்திக்கத் திட்ட மிட்டுள்ளனர் தமிழக எம்பிக்கள், அரசியல் சட்டத்தின் பெயரில் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு மாறாக பாஜகவின் பதவிப் பித்துப் பிடித்து நடந்து கொள்ளும் ஆளுநர்களை திரும்ப அழைப்பதே நாட்டுக்கு நல்லது.