headlines

img

பாரபட்சம் கூடாது

கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மாநிலத்தின் பாஜக  அரசு 40 சதவீத கமிசன் அரசு  என்று பரவலாக மக்களால் பேசப்பட்ட  நிலையில் காங்கிரஸ் கட்சியும் எந்தெந்த பதவிக்கு என்னென்ன விலை என்று ஒரு விளம்பரத்தை வெளி யிட்டிருந்தது. இதனால் வெகுண்டெழுந்த பாஜக தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு  புகார் மனுவை கொடுத்தனர். அதனடிப்படை யிலேயே ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக நோட்டீசை அனுப்பியுள்ளது. 

ஆனால் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர்கள் அஜய் மக்கான், விவேக் தங்கா, சல்மான் குர்ஷித், பவன்கேரா ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு  ஒன்றை அளித்தனர். அதில் ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெறுப்புப் பேச்சுக் களில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் கலவரம் வெடிக்கும் என்றும் கூறியுள்ளனர். அரசியல் சட்ட பதவி  வகிப்பவர்கள் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுக் களில் ஈடுபடக்கூடாது. அமித்ஷா பதவி ஏற்ற போது  எடுத்துக் கொண்ட உறுதிமொழிப்படி நடந்து கொள்ளவில்லை. எனவே அவர்கள் மூவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. ஆனால் அதன் பேரில் எந்த நடவடிக்கையும் ஆணையத்தால் எடுக்கப்பட வில்லை. 

பொதுவாக அரசமைப்புச் சட்ட அமைப்பு களாக விளங்கும் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்றவை அண்மைக் காலமாக  ஒன்றிய ஆட்சியில் உள்ளவர்களின்  கண்ணசைவின்படி அல்லது எண்ணவோட்டத் தின்படியே நடந்து கொள்கின்றன. 

எங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படக்கூடாது. ஆனால் நாங்கள்  சொல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் இந்த அமைப்புகளின் வேலை  என்ற  எண்ணத்திலேயே அவர்கள் நடந்துகொள் கிறார்கள். அந்த அமைப்புகளின் செயல்பாடு களும் அதைப்போலத்தான் இருக்கின்றன என்பதையே தற்போதைய கர்நாடக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது. 

உச்சநீதிமன்றம், வெறுப்புப் பேச்சு பேசு பவர்கள் மீது புகார் வராவிட்டாலும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி யிருந்தும் தேர்தல் காலத்தில் மாநில தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மலிருப்பது பாரபட்சமாகும். 

அதுபோல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை யில் கடந்த தேர்தலைவிட இந்த முறை ஒன்பது மடங்கு அதிகம் விற்பனையாகி உள்ளது. இவையெல்லாம் பாஜக எப்படியாவது மாநில ஆட்சியை கைப்பற்றியே தீருவது  என்பதில் மிகவும் உன்மத்தமாக நடந்து கொள்கிறது என்பதையே உணர்த்துகிறது. அவர்களுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.