‘இந்தி மொழியை நாட்டின் ஒருமைப் பாட்டின் அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. வெவ்வேறு மொழிகளில் பேசும் மாநி லங்களில் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது இந்தி மொழி யில் இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கி யத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தித் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையில் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது, என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தி மொழி பேசாத இரு வேறு மாநில மக்கள் கூட இனி இந்தி மொழியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்திய மொழி என்று அவர் நீட்டி முழக்குவது இந்தி மொழியை மட்டும் தான். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி என பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகிற மொழிகள் இந்திய மொழிகள் இல்லையா?
இந்திய ஒருமைப்பாட்டிற்கு முன் நிபந்தனை யாக இந்தியை முன்னிறுத்துவது ஒருமைப் பாட்டை வளர்க்கப் பயன்படாது. மாறாக சிதைக் கவே செய்யும்.
நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தி மொழியை திணிக்க ஒன்றிய அரசு முயன்றபோது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பெரும் கிளர்ச்சி கள் நடந்துள்ளன. இந்த பின்னணியில்தான் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கில மும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தொடரும் என்று அன்றைய பிரதமர் நேரு உறுதி யளித்தார்.
எனினும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் குறிப்பாக அரசியல் சாச னத்தின் எட்டாவது அட்டவணையில் கூறப் பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளுக்கும் சமமான வாய்ப்பும், வசதியும் வழங்குவதற்குப் பதிலாக இந்தித் திணிப்பிலேயே ஒன்றிய அரசுகள் முனைப்புக் காட்டின. இப்போதும் கூட ஒற்றை மொழித் திணிப்பை இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்க்கவே செய்கின்றன. ஆனால் ஆங்கிலத்தை முற்றாகத் தவிர்த்து இந்தியை மட்டும் ஒன்றிய அலுவல் மொழி யாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறுவது தேவை யற்ற சர்ச்சையை உருவாக்கி, மக்களுடைய கவ னத்தை திசை திருப்பும் நோக்கம் கொண்டதாகும்.
நரேந்திர மோடி அரசு அனைத்துத் துறையி லும் தோல்வியடைந்து விட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கக் கட்டணம், மருந்து களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிய அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதை மடைமாற்றம் செய்யவே மொழிப் பிரச்சனையை ஒன்றிய அமைச்சர் கிளறிவிடுகிறார். இந்தி திணிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தேசிய மொழிகள் அனைத்திற்கும் சமமான வாய்ப்பே இப்போதைய தேவை.