headlines

img

தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்

சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒன்றிய அரசின் கல்வித்துறை ஆதரவோடு  ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற  நிகழ்ச்சியை நடத்த வுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக  நவம்பர் 16 ஆம்  தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாட்டின்  கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த 3ஆயிரம் பேரை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்துச் செல்கிறார்கள். இதற்கான வேலை சென்னை ஐஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு பெயர் பதிவுக்கா கத் தனி இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. பயண செலவு தங்குமிடம் உள்பட அனைத்தை யும் ஐஐடி ஏற்றுக்கொள்கிறது.  இவர்கள் காசி, அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.   

தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது இந்த பயணத்தின் நோக்கம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இவர்கள் ஆட்களைத் திரட்டுவது கலாச்சார உறவுகளை வளர்த்தெடுக்க மேற்கொண்ட முயற்சி போல் தெரியவில்லை.

 பொதுவாக இரு கல்வி நிலையங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் மாணவர்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஆராய்ச்சிப் பணிகளில் ஒத்துழைத்துச் செயல்படு வார்கள். புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவார் கள். அவற்றையெல்லாம்  விட்டுவிட்டு அயோத்தி, காசி என ஆன்மீக நகரங்களுக்கு ஆட்களை அழைத்துச்செல்வதுதான் உலக புகழ்பெற்ற கல்வி நிலையத்தின் வேலையா ? 

அனைத்து கல்விநிலையங்களிலும் இந்தி யைப் பயிற்று மொழியாகக் கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள் ளது. அதேபோல், ஒன்றிய அரசின்  வேலை வாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசிய மாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாய மாக்கப்பட வேண்டும் என்று அந்த குழு பரிந்து ரைத்துள்ளது. பணியாளர் தேர்வாணைய  தேர்வு கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 

இப்படி தமிழுக்கும் தமிழகத்திற்கும் துரோகம் இழைக்கும் செயல்களைச் செய்து கொண்டே தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் ஒன்றிய அரசு நடத்தும் நாடகத்தைக் கண்டு தமிழர்கள் ஏமாறப்போவதில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் வட இந்திய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவும்  தமிழகத்தில் அயோத்தி ராமர் கோவிலைப் பிரபலப்படுத்தவும்  கல்வி நிலையத்தின் பணத்தை ஆன்மீக நோக்கங்க ளுக்குப்  பயன்படுத்துவதை ஏற்க முடியாது.