headlines

img

மக்கள் ஏற்க மாட்டார்கள்

‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது முழுத் திறமையையும் பயன்படுத்துவேன்’ என்று  வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆறு மக்களவைத் தொகுதிகளுக்கான வேட் பாளர்களை ஆதரித்துப் பேசுகையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த பத்து  ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர் கள் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் வினா  எழுப்பி வரும் வேளையில்தான் மோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அவரும் சரி, அவரது கட்சியினர் மற்றும்  கூட்டணிக் கட்சியினரும் சரி, இந்த வினா வுக்கான விடையை இதுவரையில் தெரிவிக்க வில்லை. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு நாங்கள் இதைச் செய்வோம் என்று கூட  சொல்ல மறுத்து வருகிறார்கள். திடீரென்று அவர்களால் எழுப்பப்பட்ட கச்சத்தீவு பிரச்ச னையில் கூட, கடந்த பத்து ஆண்டுகளில் கச்சத்தீவு விவகாரத்தில் இதைச் செய்தோம், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் என்றெல்லாம் அவர்கள் எந்த வாக்குறுதியும் தரவில்லை.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிற்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டிற்கு தேவை ஏற்பட்டபோது பிரதமராக மோடி செய்தது என்ன என்ற வினா மாநில மக்களின் மனங் களைப் பிசைகிறது. பெரு வெள்ளத்தில் தென் மாவட்டங்கள் தத்தளித்தபோது இந்தப் பக்கமே பிரதமர் எட்டிப் பார்க்கவில்லை. மக்களின் துய ரத்தைப் போக்க நிதி வழங்குமாறு, மாநில அரசு வலியுறுத்தியும் அதைத் தர முன்வர வில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியதோடு அப்படியே நிற்கிறது. அதைப்பற்றி அவரும், அவர் கட்சியினரும் வாய் திறக்க மறுக்கிறார்கள். புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஆயிரம் கோடியும், மக்கள் மொழியான தமிழுக்கு சில கோடிகளும் ஒதுக்கு வதில் இருந்தே இவர்களின் முழுத்திறமை அம்பலமாகிறது.

மூத்தகுடி தமிழர் என்ற பதம், அறிவியல் பூர்வமாக நிறைவேறிவிடுமோ என்ற அச்சத்தில் கீழடியை மூடி மறைக்க ஒன்றிய அரசு செய்த தகிடுதத்தங்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடுவார்களா? அண்மையில் தேசிய ஏற்றுமதி-இறக்குமதி ஆய்வு நிறுவனம் ஒரு  புள்ளிவிபரத்தை வெளியிட்டிருக்கிறது. மின் னணு பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 15 ஆயிரத்து 476 கோடி ரூபாயாக இருந்த மின்னணு பொருட் களில் ஏற்றுமதி ஒரே ஆண்டில் 44 ஆயிரத்து 682 கோடியாக அதிகரித்திருக்கிறது. 

இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டாத பாஜக அரசின் பிரதமர்தான் தற்போது முழுத்திறமையைப் பயன்படுத்துவேன் என்று தேர்தல் மேடையில் நின்று முழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் இதை ஏற்கமாட்டார்கள் என்பதுதான் கள நிலவரமாகும்.