மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டி ருக்கிறது. ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகள் வன்முறையை நிறுத்தவோ, மக்களை பாதுகாக்கவோ எந்தவித நடவடிக்கை யும் எடுக்க மறுக்கின்றன. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கமளிப்பது கூட தனக்கு கவுர வக் குறைவு என்று பிரதமர் மோடி கருதுகிறார்.
இந்நிலையில், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் பாஜக - விஎச்பி கும்பல் சிறு பான்மை இஸ்லாமிய மக்கள் மீது பெரும் தாக்கு தலை தொடுத்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க தங்களுடைய வெறுப்பு அரசியல் எனும் வெறுப்பை நாட்டின் பல பகுதிகளில் பாஜக பரிவாரம் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது.
குருகிராமில் விஎச்பி ஏற்பாடு செய்த யாத்தி ரையை பாஜக மாவட்டத் தலைவர் கார்கி காக்கர் துவக்கி வைத்திருக்கிறார். இந்த ஊர்வலத்தால் பதற்றம் ஏற்படும் என்று தெரிந்தும் மாநில பாஜக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை யும் எடுக்கவில்லை. முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த ஊர்வலத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது.
ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வாக னங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தகவல்கள் தெரி விக்கின்றன. ஆனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அரியானா மாநில போலீசார் கூறுகின்றனர்.
பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவர் வெறுப்பை தூண்டிவிடும் வகையில் வீடியோ ஒன்றை வெளி யிட்டது வன்முறைக்கு காரணமாக அமைந்துள் ளது. மேலும் விஎச்பியைச் சேர்ந்த சிவானந்த மகராஜ் என்பவர் அரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது “முஸ்லிம்கள் எங்கள் எதிரி கள். நாங்கள் ஒருபோதும் அவர்களுக்கு சகோ தரர்களாக இருக்க முடியாது. மதம், பெண்கள் மற்றும் பசுக்களை பாதுகாப்பதற்காக ஆயி ரக்கணக்கானவர்களை கொல்வது நியாயமா னது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது” என விஷம் கக்கியுள்ளார்.
இத்தகைய வெறியூட்டும் பேச்சுக்களின் பின் புலத்தில் தான் ஹரியானாவில் பாஜக- விஎச்பி பரிவாரம் தங்களது கோரத்தாண்டவத்தை துவக்கியுள்ளது. குஜராத் மற்றும் மணிப்பூரில் மாநில அரசும், காவல்துறையும் வன்முறையை வேடிக்கை பார்த்தது போலவே அரியானாவிலும் நடந்து கொண்டிருக்கிறார்கள். மாநில பாஜக அரசின் ஆதரவுடன்தான் ஹரியானாவில் கலவரம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. வழக்கம் போல சிறுபான்மை மக்கள் மீது பழி சுமத்தும் வேலைகளும் ஊடகங்களின் வழியாக நடை பெற்று வருகிறது. ஹரியானாவில் உடனடியாக வன்செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஒவ் வொரு மாநிலத்தையும் அவர்கள் தங்களது பரிசோதனைக் கூடங்களாக மாற்றுவது பேராபத்தாக முடியும்.